முக்கண் முதல்வா
!
தென்னாடுடைய
சிவனாரே !
அனைத்தும்
அறிந்த உமக்கே
மூன்று கண்கள்
தேவைப்படும் போது
எங்களுக்கு
இரண்டு கண்கள்
எப்படிப்
போதும் ?
குறைந்தது
நாலுகண்கள் தேவை
நடக்கும்
போது
சாலை மேடு
பள்ளங்களை
பார்த்துப்
பார்த்து நடக்க இரு கண்கள் !
எதிர் வரும்
வாகனங்களை
எதிர் கொண்டு
வழிவிட்டு நடக்க
கட்டாயம்
வேண்டும்
இன்னொரு கண்கள்
!
அருள் தருவாயா
சிவனே !
அது சரி
! தமிழில்ச் சொன்னால்
உனக்குப்
புரியாதாமே !
நீ பிஎம்
ஸ்ரீ பள்ளியில்
சமஸ்கிருதப்
மீடியத்தில்
படித்தவனாமே
!
நான் சொல்லவில்லை
ஈஷா !
தனியாக சுடுகாடமைத்து
உன்னை அதன்
‘ஓணராக்கி’ [owener ] இருக்கும்
சிவா ராத்திரி வியாபாரி
கலர் கலர்
ரீல் டான்ஸ் சாமியார்
சொல்லுகிறான்!
சிவா !
எமக்கு நாலு
கண்கள்
கட்டாயம்
வேண்டும்
நாலு பக்கமும்
பார்த்து
எச்சரிக்கையாக
ஒதுங்க …
ஆனால்
வேண்டவே வேண்டாம்
நியாயத்தைப்
பொசுக்கும்
நெற்றிக்கண்
!
சுபொஅ.
22 /02
/26 .

0 comments :
Post a Comment