பொது அடுக்களை
“ஒரு கிராமம் முழுவதும் பொது அடுக்களைஅமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும் உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !.....”
என் தம்பி
சு.பொ.ஐயப்பன் தன் இணையரோடு சென்னையிலிருந்து வந்திருந்தான் . அவன் நெடுங்காலம் பிழைப்பு
நிமித்தம் குஜராத்தில் வாழ்ந்தவன் . ஓய்வு காலத்தில் சென்னைக்கு வந்துவிட்டான் .
இருநாட்கள்
அரசியல் ,சமூகம் ,குடும்பம் ,புத்தகம் எல்லாம் பேசித் தீர்த்தோம். குஜராத்திகள் எப்போதும்
‘பிஸினெஸ் மயிண்டோடு’தான் இருப்பார்கள் எனபதோடு ’சுபம் லாபம்’ என்பதுதான் அவர்கள் ஒரே
நோக்கம் .லாபம் ஈட்ட எதையும் துணிந்து செய்வார்கள் . அதில் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள்
. இப்படி அவன் சொல்லச் சொல்ல உரையாடல் நீண்டது .
இடையில் சாப்பாடு
அடுக்களை என பேச்சு திரும்பியதும் ; குஜராத்திலுள்ள ஓர் கிராமத்தில் பொது அடுக்களை
அமைத்து கிராமமே உண்டு உயிர்த்து வாழ்வதைச் சொன்னான் . அசந்துவிட்டேன் .
இங்கு முதியோர்
கிராமங்கள் என வசதி படைத்தவர்களுக்காக உருவாக்கப்படுகிறது . பெங்களூர் ,சென்னை எங்கும்
இப்போது இதைக் காணலாம் . அடிக்கடி விளம்பரங்களையும் காணலாம் .
ஆனால் ஒரு
கிராமம் முழுவதும் பொது அடுக்களை அமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும்
உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !
குஜராத் மாநிலத்தில்
அகமதாபாத்திலிருந்து 89 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் சந்தான்கி [Chandanki ] . இந்த கிராமம்
கிட்டத்தட்ட முதியோர் கிராமமாகி விட்டது .
ஆம் .
இங்குள்ள
இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தொழில் நிமித்தம் வியாபார நிமித்தம் வெளிநாட்டுக்கோ
வெளி மாநிலத்துக்கோ புலம் பெயர்ந்து விட்டனர் . செத்தாலும் இந்த மண்ணில்தான் சாவோம்
என வைராக்கியத்தோடு முதியோர்கள் அங்கேயே தங்கிவிட்டனர் . அதனால் முதியோர் கிராமமாக
ஆகிவிட்டது சந்தான்கி.
முதியோர்களுக்கு
தினசரி உணவு சமைப்பது ஒவ்வொரு வீட்டிலும் பெரும் சிரமமான காரியம் .பணப் பிரச்சனை அல்ல
. உடல் ஒத்துழைக்கவில்லை .வேலைக்கு ஆள் கிடைப்பதும் பிரச்சனை .
நெடுங்காலம்
வெளிநாட்டில் தங்கிவிட்டு ஊர் திரும்பிய ஒருவர் முன்கை எடுக்க , கிராமத்துக்கு பொது
அடுக்களை சாப்பாட்டுக்கூடம் உருவானது .
அங்கு வந்து
மூன்று வேளையும் உணவு அருந்துவோரும் உண்டு .
இயலாதவர்களுக்கு
மூன்று வேளையும் டிபன் கேரியரில் உணவு வீடுதேடிச் வென்றுவிடும் . விருந்தினர்கள் வந்தால்
அவர்களுக்கும் அங்கேதான் உணவு .
செலவை உரிய
முறையில் பங்கிட்டுக் கொள்கின்றனர் . [மொத்தபேரும் ஒரே சாதிப்பிரிவு என்பது இங்கு கவனிக்கத்தக்கது
.]
இந்தச் செய்தியை
என் தம்பி சொன்னான் . தானே நேரடியாக அந்த கிராமத்துக்கு போய் பார்த்து வந்ததாகவும்
சாட்சி சொன்னான் .
ஒரு வீடியோ
கிளிப்பிங்கையும் பகிர்ந்தான் . அது கீழே !
நல்ல முன்னெடுப்புத்தான்
.
இங்கும் முயற்சிக்கலாமே
!
சாதி ,மதம்
மீறியதாக இங்கு முயற்சிக்கலாமே !!!!
சுபொஅ.
6/11/25
https://youtu.be/22dpDRN38YM?si=s1KZ5BkWs_TKxz-4
0 comments :
Post a Comment