சாலையே ! தெருக்களே !
நன்றி ! நன்றி !
எம் முதியோர்களை
தினசரி
அஷ்டாவதானியாகவும்
தசாவதானியாகவும்
மாற்றுகிறாயே !
உனக்கு
கோடான கோடி நன்றி !
கண்கள் குனிந்து
சாலை மேடு பள்ளங்களைப் பார்க்க
கண்கள் நிமிர்ந்து
சாலை விதிகளை மதிக்காமல்
எதிர்வரும் வாகனங்களை கவனிக்க
காதும் கண்ணும்
பின் தொடர்ந்து முந்த எத்தணிக்கும்
வாகனங்களை கவனித்து வழிவிட
சுற்றுப்போடும் தெருநாய்களை
சாமர்த்தியமாய் விரட்ட
ஹெட் ஷெட்டில் பாட்டு கேட்டபடியும்
செல்போணை நோண்டியபடியும்
குறுக்கே ஓடும் இளைஞரை
இடிக்காமல் கடக்க
உடன் நடப்பவரோடு
உரையாடல் அறாமல் தொடர
வழியில் கடையில்
வாங்க வேண்டியதை
ஞாபகமாய் வாங்கி நகர
அடடா ! எத்தனை எத்தனை
கவனக் குவிப்புகள் ஒரே நேரத்தில்
முதியோரை இப்படி எல்லாம்
அஷ்டாவதானியாகவோ
தசாவதானியாகவோ
மாற்றிக்கொண்டே இருக்கும்
சாலையே தெருவே
நன்றி !நன்றி !
சுபொஅ.
26/11/25.
குறிப்பு : ’அஷ்டாவதானி’ எனில் எட்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர். ’தசாவதானி’ எனில் பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் .அக்காலத்தில் இதனை பாராட்டி பட்டம் பட்டம் வழங்குவர் .
0 comments :
Post a Comment