கவிதையில் விடை கிடைக்காது….

Posted by அகத்தீ Labels:

 



கவிதையில் விடை கிடைக்காது….      

 

கொஞ்சம் அறிவியலைப் புரட்டினேன்

காதலிக்கத் தொடங்கும் அகவை முன்பே

அவனுக்கும் அவளுக்கும்

இதயமும் மூளையும் முழு அளவை எட்டிவிடுமாம்.

ஆனாலும்  அவனுக்கும் அவளுக்கும்

காதலிக்கும் போது இருந்த

இதயமும் மூளையும்

கல்யாணத்துக்குப் பின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் பிறந்தபின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் வளர வளர இருந்த

இதயமும் மூளையும்                                                    

ஒவ்வொரு காலத்திலும் களத்திலும் இருந்த

இதயமும் மூளையும்

முதுமையில் இப்போது இருக்கும்

இதயமும் மூளையும்

அளவு மாறாமலே

குணம் மாறிக்கொண்டே இருப்பது ஏன் ?

உள்ளுக்குள் நிகழும் மாற்றங்களா ?     

அனுபவ நெருப்பில் வெந்த பக்குவமா ?

கவிதையில் விடை கிடைக்காது

காலத்திடம் கேட்டுப் பார்ப்போம்.

 

சுபொஅ.

21/11/25.

 


0 comments :

Post a Comment