வெறும் வார்த்தை அல்ல...

Posted by அகத்தீ

 







வெறும் வார்த்தை அல்ல...

இறகு உதிரவில்லை
மாமலை சாய்ந்துவிட்டது.

வெற்றிடம் வெறும்
வார்த்தை இல்லை

எம் உயிர்த் தோழா !
யெச்சூரி எனும் நம்பிக்கையே !

நாங்கள் இழந்தது
தனி மனிதரில்லை

தத்துவ விளக்கன்றோ
அணைந்து விட்டது

சூழும் பகை முடிக்க
வியூகம் வகுக்கும் நேரத்தில்

பாழும் மரணம் வந்து
மறித்ததே எம் பாதையை!

உன்னை வார்த்தது மார்க்சியம்
மார்க்சியத்தை வாளாக்கினாய் நீ !

மாணவனாய் களம் வந்தாய்
மார்க்சிய ஆசானாய் வலம் வந்தாய்!

துணிச்சலின் முகவரி நீ !
சுடரும் அறிவுத் தீ நீ!

இடர்மிகு காலத்தில்
இயக்கத்தை வழி நடத்தினாய் !

கொந்தளிக்கும் கடலில்
மாலுமியை இழந்தோமே !

சுபொஅ.

0 comments :

Post a Comment