ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

Posted by அகத்தீ Labels:

 


ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

 

 

காற்றே வா ! காற்றே வா !

என் சுவாசப் பையை நிரப்ப

காற்றே வா ! காற்றே வா !

 

நான் புனிதமான சனாதனி

ஆச்சாரமான ஆள் –தீட்டு

தோஷம் அண்டலாகாது !

 

காற்றே வா ! காற்றே வா !

நான் தீண்டக்கூடாத இடங்களை

நீயும் தீண்டாமலே வா !

 

சாக்கடைகளை தொடாமல் வா !

நந்தவனத்தை மட்டுமே தீண்டி வா !

சேரிக்குள் நுழையாமல் வா !

 

மசூதி சர்ச்சுகளை மறந்தும்

அணைக்காமல் வா ! – புலால்

நாற்றம் சுமக்காமல் வா !

 

மாட்டுக்கறி மாமிசக் கடை

அருகேயும் போகாமல் வா !

வியர்வை நாற்றம் கலவாமல் வா !

 

கோமாதா குசுவாக வா !

மூத்திரக் குளமானாலும் நீ

சாத்திரக் குளம் தீண்டி வா!

 

ஆச்சாரமான காற்றையே நான்

ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

ஆச்சார விதிமீறாமல் வா ! வா !

 

சுபொஅ.

23/09/24.

 

[ இதில் நான் என்பது நானல்ல யார் என்பதை நீவிர் அறிவீர்தானே ! ]

 

 


0 comments :

Post a Comment