வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

Posted by அகத்தீ Labels:

 




வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

நாமறிந்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு “ நினைவில் மிளிரும் ஜிமிக்கிக் கம்மல்” .

”கைவிட்ட
பலூன் மேலே போவதைத் தவிர
வழியில்லை.
அது பலூனுக்குத்
தெரியாது
கையில் இருக்கும் வரை.”

“ ஒவ்வொரு முறையும்
மரணம் வரை
உப்பி நிற்கிறது.”

இப்படி பலூன் இவரது கவிதையில் வாழ்வியல் பேசுகிறது .

“ ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது.”

“அணில் ஏறிய மரமென
தடமின்றி மறைந்தும்
கழுவிக் கவிழ்த்திய பாத்திரங்கள்
காலத்தில் ஏராளம்.”

இப்படி வாழ்வின் வலியை பொதிந்து கவிதை தருகிறார்.

”இவ்வுலகில் பசியோடு
ஒரு பிள்ளை இருப்பதைச் சொல்ல பள்ளிக்கூட
மதிய உணவுத் தட்டொன்று
மிதந்து நகரின் மையத்தில் போகிறது .”

நகரத்து வெள்ளத்தை விவரிக்கும் கவிதையை இப்படித்தான் முடிக்கிறார்.

“ சைக்கிளில் பயணித்து
டீசல் விலையேற்றப்
போராட்டத்தில்
கலந்துகொண்ட
ஒரு மனிதன்
என்னைத் தோழர் என்று அழைத்தார்.”

தனக்காக அல்ல பிறருக்காக வாழ்பவன்தானே தோழர் .

“மேலே வரும் தகுதியுடைய
உனது கோப்புகளை
சத்தமின்றி கீழே எடுத்து வைக்கும்
மர்மக் கைகள் நிறைந்த உலகில்
நேர்மையாக இரு !”

இப்படி யதார்த்தத்தை பகடி செய்கிறார் .

நூல் நெடுக பல நெற்றியடி வரிகளோடு கவிதைகள் தந்த தோழர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள் .

நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் . ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 160 , விலை : ரூ.160 /

சுபொஅ.

03/09/24

0 comments :

Post a Comment