நினைவுச் சங்கிலி ஆங்காங்கே

Posted by அகத்தீ Labels:

 





நினைவுச் சங்கிலி

ஆங்காங்கே

அறுந்துகிடக்கிறது .

 

மனத்திரையில்

முன்னும் பின்னுமாய்

காட்சிகள் நகர்கின்றன

 

திடீரென யாரேனும்

பழைய குளத்தில்

கல்லெறிந்து விடுகின்றனர்

 

அதுவும் மரணங்கள்

நினைவுக் குட்டையைக்

கலக்கிவிடுகின்றன

 

அப்போது மேலெழுந்த

நினைவுகளைக் கேட்க

காதுகள் தயாராய் இருக்கின்றன

 

பதுங்கி இருந்த நினைவுகள்

பேசி முடித்தப்பின்னரே 

வரிசையாய் முண்டியடிக்கின்றன

 

இணையம் போல் கையிருப்பு

அனைத்தையும் கொட்டிவிடுவதில்லையே

நம் இதயம் .நம் மூளை.

 

சுபொஅ.

19/07/24.

 

 


0 comments :

Post a Comment