மணலை வடமா திரிச்சேன்

Posted by அகத்தீ Labels:

 



[ முதல் நாலுவரி நேற்று எழுதி பதிந்தது . இன்று மேலும் எட்டு வரிகளோடு பதிகிறேன் .கண்டிப்பா இதுல பட்ஜெட் அரசியல் ஏதும் இல்ல சாமி !]

 

மணலை வடமா திரிச்சேன்

தேரு நகரலை சாமி - கடல்

நுரையில அல்வா கிண்டினேன்

வயிறு நிறையல சாமி !

 

காற்றுல கணக்கை எழுதினேன்

ஓடி அடையல சாமி! –சும்மா

கனவுல கல்யாணம் பண்ணினேன்

குழந்தை பொறக்கல சாமி !

 

மந்திரத்தில மரத்தை நட்டேன்

தோப்பு விளையல சாமி – ஆள

சமுத்திரத்தில நடக்க வச்சேன்

மூழ்கிப் போச்சே சாமி !

 

சுபொஅ.

24/07/2024.

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment