ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

Posted by அகத்தீ Labels:

 

 “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி”

என்று பட்டுக்கோட்டை பாடிய வரிகள் குழந்தைகளுக்கானதுதான். ஆயின் இன்று சில முதியவர்களை பார்க்கும் போது இதையே பாடத் தோன்றுகிறது .

 

முதுமை என்பது வெறுமே வயதோடு சம்மந்தப்பட்டதல்ல .முதிர்ச்சி உடலுக்கு வரும் போது உள்ளமும் முதிர்ச்சி அடைய வேண்டும், சிந்தனையும் முதிர்ச்சி அடைய வேண்டும் ,பண்பாடும் முதிர்ச்சி அடைய வேண்டும் . அப்போதுதான் கொண்டாடப்பட வேண்டிய முதுமையாக அது இருக்கும் .கிட்டத்தட்ட எல்லோரும் தோற்றுப் போகிற இடம் அதுதான்.

 

பக்குவமாதல் எனில் முடங்கிப் போதலும் அல்ல ; எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தலும் அல்ல .  புரிந்து வழிவிடுதலும் ,புன்னகைத்து தட்டிக் கொடுத்தலும் ,புதிய முயற்சிகளுக்கு நம்பிக்கை தருதலும் ,கேட்காதவரை எதுவும் சொல்லாதிருத்தலும் , கேட்டபின் சொன்னாலும் அதையேதான் அவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்காதிருப்பதும் அடங்கும் .

 

ஒவ்வொருவருக்கும் மூளை இருக்கிறது .ஒவ்வொருவரிடமும் அவருவருக்கான நியாயத் தராசும் இருக்கிறது . இதனை ஏற்றால் முதுமையோ இளமையோ உறவும் நட்பும் நீடிக்கும் நிலைக்கும் !!

 

[ இப்படி கருத்து கந்தசாமியாய் உளறாதிருப்பதும் முதுமையின் தேவைதானே !]

 

சுபொஅ.

 

0 comments :

Post a Comment