அடடா ! அந்த நாட்கள்

Posted by அகத்தீ Labels:

 


டவுசர் பாக்கெட்டில்

முறுக்கை ,அதிரசத்தை , ஆரஞ்சு மிட்டாயை

அள்ளிப் போட்டுக்கொண்டு

விளையாடப் போக …

பக்கத்து வீட்டு ராணி பாவடையில் மறைத்து

வெல்லம் ,தேங்காய் கீறல் , மாய்காயும் உப்பும்

கொண்டுவர வட்டமாய் உட்கார்ந்து

பகிர்ந்து உண்டு எல்லோரும் மகிழ

அடடா ! அந்த நாட்கள் இனிமையானவை

வீட்டுக்குத் தெரியாமல்தான் கொண்டு வந்தோம்

திருட்டு அல்ல  பகிர்ந்துண்ணும் பாசம் பேரன்பு.

எந்த வயதில் அந்த அன்பை

எங்கு தொலைத்தோம் ?

 

சுபொஅ.

07/07/24.

 


0 comments :

Post a Comment