இதுவும் கடந்து போகும்...

Posted by அகத்தீ Labels:

 



உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

உன் ஏழாவது தலைமுறை

உன்னை நினைவு வைத்திருக்குமா ?

உன் ஊரார் நினைவில்

உனக்கு இடம் உண்டா ?

 

பிறந்தவர் எல்லோரையும்

நினைவில் வைத்திருக்க முடியுமா ?

வரலாறு என்னை நினைவு வைத்திருக்க

வேண்டிய அவசியமில்லை என்றார்கள்

இன்னும் நம் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கிற

பிடல் காஸ்ட்ரோ  ,இஎம்எஸ் ,ஜோதிபாசு …

 

இந்த பிரபஞ்சத்தில்

பூமியே மிகச் சிறிய கடுகு …

இந்த பூமியில் நீயார் ?

உன் இடம் யாது ?

கொஞ்சம் யோசித்தால்

பெருமூச்சே மிஞ்சும் ..

 

எந்த நொடியிலும் யார் வாழ்வும்

முடிந்து போகலாம்

வாழ்கிற காலம் வரை

அன்பு செய் ! அன்பு செய் !

மானுட இனத்தை அன்பு செய் !

இயற்கையை நேசி !

இதயமும் மூளையும் திருப்தி கொள்ள

வாழ முனைந்து நில் !

 

உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

சுபொஅ.

30/7/24.

 

 

 

 


0 comments :

Post a Comment