சொற்கோலம். 2. ஓர் நொடியில் அவன் / அவள் என்பது மாறி பிணம் என்றானது. இப்போது உயர் திணை இல்லை. அகறிணை. நேரம் செல்லச் செல்ல நாறும். அழுகும். வைத்து பாதுகாப்பது பெரும் சிரமம். எரித்து தீ தின்னக் கொடுப்பதா? புதைத்து மண் தின்னக் கொடுப்பதா? காக்கை கழுகுக்கு இரையாக்குவதா? அறுத்து பாடம் படிக்க மருத்துவ கல்லூரிக்கு உடல் கொடை அளிப்பதா? கேள்வி எளிது. பண்பாடு, நம்பிக்கை, பழக்கவழக்கம், சடங்கு, சம்பிரதாயம் எத்தனை எத்தனை இடையூறுகள். நாறும் பிணத்தை புதைக்கவோ எரிக்கவோ விடாமல் தடுத்து வழிமறிக்கும் ஆணவமும் சேரும். பிறப்பைக் கொண்டாடுவது போல் இறப்பைக் கொண்டாட முடியாதுதான். பிறப்பை தடுக்க வழியுண்டு. இறப்பை தடுக்கவே இயலாது. யாக்கை நிலையாமையை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. முரட்டுத்தனமாய் பிணத்தோடும் மல்லுக்கட்டும் பழக்க வழக்கத்தை புதையுங்கள் / எரியுங்கள் முதலில். சு.பொ.அகத்தியலிங்கம்.
Labels
- அலசல் ( 98 )
- அனுபவம் ( 41 )
- ஆய்வு ( 4 )
- இலக்கியம் ( 45 )
- கட்டுரை ( 7 )
- கவிதை ( 194 )
- சிறுகதை ( 5 )
- சொற்கோலம் ( 11 )
- தினம் ஒரு சொல் ( 101 )
- நினைவுகள் ( 4 )
- நூல் மதிப்புரை ( 111 )
- புரட்சிப் பெருநதி ( 53 )
- விவாத மேடை ( 21 )
About Me
Followers
Blog Archive
-
▼
2019
(
63
)
-
▼
January
(
11
)
- sorkolam 6
- corkolam 5
- sorkolam 4
- சொற்கோலம்.3
- சொற்கோலம். 2.ஓர் நொடியில் அவன் / அவள் என்பது மாறி ...
- சொற்கோலங்கள். 1.
- சொற்கோலம். 1எந்த விழாக் கொண்டாட்டமும் ஏதேனும் கீறல...
- pபோஓபோ
- பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் ..
- தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை...
- எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !
-
▼
January
(
11
)
Powered by Blogger.
0 comments :
Post a Comment