Posted by அகத்தீ

சொற்கோலம். 2. ஓர் நொடியில் அவன் / அவள் என்பது மாறி பிணம் என்றானது. இப்போது உயர் திணை இல்லை. அகறிணை. நேரம் செல்லச் செல்ல நாறும். அழுகும். வைத்து பாதுகாப்பது பெரும் சிரமம். எரித்து தீ தின்னக் கொடுப்பதா? புதைத்து மண் தின்னக் கொடுப்பதா? காக்கை கழுகுக்கு இரையாக்குவதா? அறுத்து பாடம் படிக்க மருத்துவ கல்லூரிக்கு உடல் கொடை அளிப்பதா? கேள்வி எளிது. பண்பாடு, நம்பிக்கை, பழக்கவழக்கம், சடங்கு, சம்பிரதாயம் எத்தனை எத்தனை இடையூறுகள். நாறும் பிணத்தை புதைக்கவோ எரிக்கவோ விடாமல் தடுத்து வழிமறிக்கும் ஆணவமும் சேரும். பிறப்பைக் கொண்டாடுவது போல் இறப்பைக் கொண்டாட முடியாதுதான். பிறப்பை தடுக்க வழியுண்டு. இறப்பை தடுக்கவே இயலாது. யாக்கை நிலையாமையை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. முரட்டுத்தனமாய் பிணத்தோடும் மல்லுக்கட்டும் பழக்க வழக்கத்தை புதையுங்கள் / எரியுங்கள் முதலில். சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment