pபோஓபோ

Posted by அகத்தீ Labels:

உழவனின் கோபக் குரல் உழன்றும் உழவே தலை என்றும் உலகத்தாற்கு அச்சாணி என்றும் உழவினார் கைமடங்கின் சந்நியாசிக்கும் சோறில்லை என்றும் உழாமல் சோம்பி இருப்பின் நிலமென்னும் நல்லாள் நகுமென்றும் -இன்னும் பலவாக தோள்மீது சுமந்து கொண்டாடிய உழவர் படும்பாடு உரைக்கும் தரமோ இன்று ! உழவர் திருநாளின் வாழ்த்துரைத்தால் போதுமோ பொங்கும் கண்ணீரை யார் துடைப்பார் ? பச்சை வயலை எல்லாம் எங்கும் விஷவாயு களமாக்கி மலடாக்கி தூர்த்துவிட்டு உழவன் பெருமை உரைப்பதும் வெறும் பேச்சே! நீர்நிலையைத் தூர்த்துவிட்டு மனைபோட்டு விற்றுவிட்டு உழவின் தேவையை ஊர் முழுக்க முழங்குவதில் லாபம் என்ன ? உழவை அழித்துவிட்டு டிஜிட்டல் சிப்ஸ்சை திண்று பசியாறுவையோ ? போகி நெருப்பில் பொசுக்கிடு உன் மெத்தனத்தை தூக்கத்தை அகத்தில் நெருப்பேற்றி சூடும் சொரணையும் உள்ளவனாய் மாறிவிடு! யாரோ ஒரு தலைவர் விடுதலையை தருவார் என நம்பி ! காலில் விழும் கலாச்சாரத்தைப் போகி நெருப்பில் பொசுக்கு சுயமரியாதை என்பது வெறும் சூத்திரத்தில் அடங்குவதல்ல அநீதி நடக்குமிடமெல்லாம் ஆர்த்தெழும் போர்க்குணமே! வெறுங்கையில் முழம்போட்டு வீண்க்னவு காணாமல் வாழ்க்கையை வென்றெடுக்க வியூகத்தில் சங்கமிப்பீர் ! சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment