எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !

Posted by அகத்தீ Labels:

எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !

சு.பொ.அகத்தியலிங்கம் . ஆண்டவரே ! நீவீர் ஆண்டைகளின் இரட்சகர் எனில் எமக்கு நீவீர் வேண்டாம் ! ஆண்டவரே ! நீவீர் ஆண்களின் கடவுள் எனில் – நிச்சயம் நீவீர் எமக்கு வேண்டாவே வேண்டாம் ! ஆண்டவரே ! நீவீர் ஆளுவோரின் இறைவன் எனில் - உம் நாமத்தை நான் உச்சரிக்காதிருக்கக் கடவது! ஆண்டவரே ! நீவீர் அநீதியின் பக்கமே எப்போதுமிருக்கிறீர் ! சைத்தானும் நீவிரும் ஒன்றா ? ஆண்டவரே ! நிறத்தின் பேரால் பாரபட்சம் காட்டுகிறீர் நீவிர் எப்படி ஆண்டவராவீர் ? ஆண்டவரே ! சாதி ,மதம் ,பால் ,தீட்டு என சன்னதியை மூடும் நீவிர் எப்படி ஆண்டவராக இருக்க முடியும் ? ஆண்டவரே ! அப்பாவிகளுக்கு கொடுமை இழைப்போரை காணிக்கை பெற்று புனிதராக்கும் நீவிர் எப்படி இதயம் உள்ளவராவீர் ! ஆண்டவரே! பலவீனர்களுக்கும் பாவப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தோள் கொடுகாத நீவீர் ! எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !

0 comments :

Post a Comment