சொற்கோலம்.3

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .3. “உஷ் ! சத்தம் போடாதே !” குழந்தைகளை அதட்டினாள் அம்மா. அமைதி திரும்பியது போல் தெரிந்தது . ஆனால் கொஞ்ச நேரம்தான் .மீண்டும் குதூகலாமாய் அவர்கள் கூச்சலிட்டனர் . வீட்டில் கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது . நோய்வாய்ப்பட்ட பெரியவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர் . பெரிய பிள்ளைகள் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கின்றனர் . அம்மா புலம்பினாள் . மீண்டும் அதட்டினாள் . “ போம்மா ! நாங்க விளையாடுகிறோம் …” எனச் சொல்லிக் கொண்டே கோரஸாக கூச்சலிட்டனர் குழந்தைகள் . அம்மா பொறுமை இழந்தாள் . ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்தலானாள் . குழந்தைகள் பிடிகொடுக்காமல் ஓடினார்கள் .கையில் சிக்கிய பொடியன் காதைத் திருகினாள் அம்மா .அவன் ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான் . மற்ற குழந்தைகளும் கூடவே அழத் தொடங்கினர் . இப்போது அம்மா சமாதானம் செய்வதில் இறங்கினாள் . மீண்டும் குழந்தைகள் உற்சாகமாய் கூச்சலிட்டபடி விளையாடத் தொடங்கினர் . உரிமைகளை ஒரு போதும் யாரும் நசுக்கவோ பறிக்கவோ முடியாது .அடக்குமுறையினால் சற்று அடங்குவதுபோல் தெரிந்தாலும் ; அந்த அமைதி அற்ப நேரமே ! குழந்தைகள் மனித உரிமைப் பாடத்தை அவர்களின் வழியில் சொல்லியபடியே ஆரவாரம் செய்தனர் . அமைதியைவிட இரைச்சல் மேலானது அல்லவா ?

0 comments :

Post a Comment