இவனும் திருடன் அவனும் திருடன் இங்கே எவனை நம்புவது?

Posted by அகத்தீ Labels:

 
 
இவனும் திருடன் அவனும் திருடன் 
இங்கே எவனை நம்புவது?
 
 
“இவனும் திருடன்.அவனும் திருடன். எவனை நம்புவது?” பஸ்ஸில், ரயிலில், டீக் கடையில், குழாயடியில் எங்கும் எதிரொலிக் கும் விரக்திப் பெருமூச்சு இதுவே. என்ன நடக் கிறது நாட்டில்?சாதாரணக் குடிமகன் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நிற்கிறான். புலம்பித் தவிக்கிறான்.விரக்தி பரவப்பரவ செயல் வேகம் குறை யும். முடங்கும். அதைத்தான் ஆட்சியாளர் கள் விரும்புகின்றனர்.சுரண்டும் கூட்டத் துக்கு அதுவே கொண்டாட்டம்.அதைத்தான் விரும் புகின்றனர். ஆகப் பெரும்பாலான ஊடகங்களும் அந்தத் திருப்பணியைத்தான் பரபரப்பாகச் செய்து காசு பண்ணிக் கொண் டிருக்கின்றன.

மாறாக, அதிருப்தி நெருப்பைப் பற்ற வைத்து அதில் போராட்ட எரிமலையைக் குமுறி எழச்செய்வதே காலத்தின் தேவை யாகும். ஆம், இன்று விலையேற்றம், மின் வெட்டு, விவசாய நெருக்கடி என கழுத்தை நெரிக்கும் பிரச்சனைகள் ஒருபுறம். மறுபுறம், லட்சம் கோடிகளாய் படையெடுக்கும் ஊழல் கரையான்கள். அதுவும் ஒரு இடத்தில் கரை யான் எனில் மருந்து அடிக்கலாம். நெருப்பால் பொசுக்கலாம்.வீடு முழுக்க கரையான் எனில், என்ன செய்வது?


" ஆற்றைக் காணோம்
குளத்தைக் காணோம்
வயலைக் காணோம்
ஏரியைக் காணோம்
மலையைக் காணோம்
பாறையைக் காணோம்
 சுரங்கத்தைக் காணோம்

மாயமல்ல..மந்திரமல்ல..
யாரோ செய்த தந்திரமல்ல..
உலகமயத்தின் உள்ளூர் பலி
ஊரை அடித்து உலையில் போட
உலகவங்கி காட்டிய வழி..

இன்னும் இமைகள் மூடிக்கிடந்தால்
ஒரு நாள் காலை செய்திவரும்
இந்திய நாட்டையே மொத்தக் குத்தகையாய்
பன்னாட்டு திமிங்கலம் விழுங்கியதென்று..
அமெரிக்காவின் அடிமை தீபகற்பமாய்
இந்திய நாடு கைமாறியதென்று..

அப்போதும் நாம் பதட்டமின்றி..
பழியை பாகிஸ்தான் மீது தூக்கிப் போட்டு
சாதி, மத, இன சண்டையில் மூர்க்கமாகி
நிழல் சண்டை நடத்திக்கொண்டிருப்போம்
நிஜமான எதிரியை இனம் காணாமலே..
மெய்யான தோழருடன் அணிசேராமலே.."


இதுதானே இன்றைய எதார்த்தம்?
இதற்கு என்ன காரணம்?

ஊழலைப் பற்றி பேச இன்று யாருக்கு யோக்கியதை இருக்கிறது?முந்திரா ஊழல், நகர்வாலா ஊழல், மாருதி ஊழல், போபர்ஸ் ஊழல், முத்திரைத் தாள் மோசடி, ஆதர்ஸ் ஊழல், காமென் வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜிஸ்பெக்ட் ரம் ஊழல், இஸ்ரோ ஊழல், கோதாவரிப் படுகை ஊழல், விமான நிலைய ஊழல், நிலக் கரி ஊழல் என எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியை இனியும் நம்ப முடியுமா?

சவபெட்டி ஊழல்,ஹவாலா ஊழல், நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்க ஊழல்,சுரங்க ஊழல்..அடடா..கர்நாடகாவில் பி.ஜே.பி என் றால் சுரங்கத்திருடன் கட்சி - பெல்லாரி ஜனார்த்தனரெட்டி பிரதர்ஸ் என்றே பொருள் அல்லவா?இப்போது படையெடுக் கும் ஊழல் அனைத்தின் மூலவேர் பா.ஜே.க ஆட்சியிலும் ஆழமாய் ஊடுருவி நின்றதே. 2ஜி ஊழலில் கூட அருண்ஷோரி அமைச் சராக இருந்த போது ஐம்பதினாயிரம் கோடி குறித்து தணிக்கைக் குழு கோடிட்டதே. ஏன் அவரது சகஅமைச்சர் ஜெக்மோகன் பகிரங்கமாக இதனைக் கூறிய தால் அவர் பதவி பறிக்கப்பட்டு காஷ்மீர் ஆளுநராக தூக்கி எறியப்பட்டு வாயடைக்கப்பட்டாரே! அங்கு அவர் காஷ்மீர் சிக்கலை மேலும் மதவெறியோடு மேலும் சிக்கலாக்கியது தனிச்செய்தி. ஊழலைப் பற்றிப் பேசுகிற தார் மீக உரிமை பாஜக -வுக்கு கூட கிடையாது.

தி.மு.க என்றாலே ஊழல் கட்சி என்றே மக்கள் கருதுகிறார்கள். இதற்கும் மேல் சொல்லவும் வேண்டுமோ! அஇஅதிமுக எந்த விதத்திலும் நேர்மையானதல்ல. வேண்டுமா னால் நீதியை விலைக்கு வாங்கத்தெரிந்தவர் என்று சொல்லலாம். டான்ஸி உதாரணம் ஒன்று போதுமே.பெங்களூரில் நீதிபடும்பாடு சொல்லவும் வேண்டுமோ?கிரானைட் மோசடி யில் இவ்விரு கட்சியினருக்கும் தொடர்பு உண்டென்பதை குழந்தையும் அறியுமே!

இவற்றை எல்லாம் விட மிக முக்கியமா னது, ஊழலை பெரிதும் ஊட்டிவளர்க்கும் உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கை களை ஆதரிப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டியன்றோ நடக்கிறது. கொள்ளை அடிக்க வாசலைத் திறந்து வைத்துவிட்டு, காவலர்களை வாபஸ் வாங்கிவிட்டு,கூட இருந்து பங்கு வாங்கிக் கொள்ளுவதுதானே இவர்கள் ஆட்சியில் நடந்தது. நடக்கிறது. இதில் காங்கிரஸ் என்ன, பா.ஜ.க.என்ன, திமுக என்ன, அதிமுக என்ன, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அன்னா ஹசாரே குழுகூட மக்கள் ஆத ரவை மெல்ல மெல்ல இழந்து விட்டதே..ஊழல் ஒழிப்பின் கதி அவ்வளவுதானா என முணு முணுப்போர்கள் உண்டு.ஊழலின் ஊற்றுக் கண்ணான கொள்கைகளை அடையாளம் காணாமல்-காட்டாமல் நிழல் சண்டை போட்ட அன்னா குழுவினர் தோற்றதில் வியப்பொன் றுமில்லை. கறுப்புப்பண சாமியார் பாபா ராம் தேவ் பற்றி விளக்கமும் வேண்டுமோ என்ன!

அதேநேரம் இந்த கொள்கைகளை எதிர்த்து நிற்பது யார்? மாற்று கொள்கைகளை முன்வைப்பது யார்? இடதுசாரிகளே.அவர்கள் குரல் சன்னமாக ஒலித்தாலும் சரியாக ஒலிக் கிறது.அவர்கள் பலம் குறைவாக இருப்பினும் திசைவழி மிகச்சரியாக இருக்கிறது. ஆனால் அந்தக் குரலை இருட்டடிப்பு செய்வதிலேயே கார்ப்பரேட் ஊடகங்கள் முனைப்புக் காட்டு கின்றன.இந்தச் சூழல்தான் மக்கள் மனதில் விரக்தி சூழக் காரணமாகிறது.இப்போது இடதுசாரிகள் கடமை அதிகரிக்கிறது. சவா லாகிறது.

அவருக்கு மாற்று இவரல்ல. இவருக்கு மாற்று அவரல்ல. தேசத்துக்குத் தேவை கொள்கை மாற்று. அதை கெட்டியாகப் பற்றி நிற்பவர்கள் இடதுசாரிகளே.இதை உரக்கச் சொல்ல இதைவிட உகந்த நேரம் எது? தனி நபர் தாக்குதலாகவே அரசியலைப் பேசிப் பேசி மக்களை மனச்சோர்வில் முடங்கிப் போகச் செய்கிற ஊடகங்கள் நடுவில், கொள்கைவழி செய்திகளை விமர்சனங்களை முன்வைக்கும் தீக்கதிரை வீடுவீடாகக் கொண்டு சேர்க்கா மல் மக்களை நொந்துப் பயனில்லை.

சு.பொ.அகத்தியலிங்கம்.


வாசகர்கள் கருத்து

1 comments :

  1. p.guruvignesh

    தாங்கள் எவ்வளவு எழுதினாலும் இவர்களுக்கு உரைக்காது என்பது தான் வருத்தமான உண்மை அய்யா. இவ்வளவு ஊழல் நடந்தது குறித்து நீங்கள் எழுதியதை படித்தேன். பாவம் இந்த அப்பாவி மக்கள் இவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல், போர்ப்ஸ் ஊழல் தவிர ஏதும் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. ஏன் எனக்கு கூட இப்பொழுது தான் தெரிகிறது. முடிந்தால் இதை பாமரனுக்கும் கொண்டு போய் சேர்க்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அய்யா.

Post a Comment