இடும்பைகூர் அலைபேசி..

Posted by அகத்தீ Labels:





 இடும்பைகூர் அலைபேசி..

அலைபேசி,கைபேசி
செல்.மொபைல் - உன்
பெயர் எதுவானால் என்ன?
பிரச்சனை பிரச்சனைதான்

உன்னோடு
வாழ்வும் முடியவில்லை
நீ இன்றி
வாழவும் முடியவில்லை..

அரக்கப் பரக்கவேலைசெய்து
கொண்டிருக்கும்போதும்...
அவசரமாக கழிப்பறையில்
ஒதுங்கும்போதும்...
பசி பொறுக்காமல்
உணவுக் கவளத்தை
விழுங்கும்போதும்..
ஒலி எழுப்பி
நிம்மதி கெடுக்கிறாய்..

உரையாடலை முறிக்கிறது
உன் டயல் டோண்..
தொடர்புஎல்லைக்கு வெளியே
இருப்பதாய்க் கூறி
உறவையே முறிக்கிறாய்

நீ இன்றி
எந்த ரகசியமும் இல்லை
உன்னிடம்
எதுவும்
ரகசியமாய் இல்லை..

கடன்காரன்
அழைக்கும்போது
சட்டென இணைக்கிற நீ
தேவையான நேரத்தில்
கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..

படம் பிடிக்கிறாய்
பாட்டும் படிக்கிறாய்
போட்டும் கொடுக்கிறாய்

நீ கூட இருந்தால்
கூட்வே ஒரு ஆள்
துணை இருப்பதாய்
ஒரு ஐதீகம்..
ஆனால்
கூடவே ஒரு
ஒற்றன் இருப்பதை
அனுபவம் சொல்லும்


இடும்பை கூர்
அலைபேசி
உன்னோடு வாழ்வதரிது
நீஇன்றியும்
வாழ்க்கை அரிது..
என் செய்வேன்
நோக்கியோனே

சு.பொ.அகத்தியலிங்கம்








2 comments :

  1. venu's pathivukal

    அண்ணலும் நோக்கியா
    அவளும் நோக்கியா
    ஒன்றும் செய்வதற்கில்லை...

    வாழ்த்துக்கள்
    கொலைபேசிக் கவிதைக்கு

    எஸ் வி வி

  1. Rathnavel Natarajan

    அருமை ஐயா.
    நன்றி.
    Please avoid Word Verification.

Post a Comment