கேள்விகேட்டுக் குடைகிறாயே!

Posted by அகத்தீ Labels:





 கேள்விகேட்டுக் குடைகிறாயே!

லெமூரியாக் கண்டம்
இருந்ததா? இல்லயா?
ஓயாது கேள்வி
கேட்டுக் குடைகிறாய்..

என்முப்பாட்டன் குளித்த
குளம் இப்போது இல்லை..
என் பாட்டி துணிதுவைத்த
ஆற்றுக் கால்வாய்
இருந்த தடம் தெரியவில்லை..
அவர்கள் பயிர் செய்த
வயல்களெல்லாம்
காங்கிரீட் காடுகளாக..
ஊருணியும் ஏரியும்
அந்த அடுக்குமாடி
குடியிருப்பின் கீழே
இருந்ததாய் கேள்வி..

தண்ணீரை காசுகொடுத்து
வாங்க வெட்கப்படவில்லை.
சோற்றையும் இறக்குமதி செய்ய
பெருமையோடு காத்திருக்கிறோம்..
மூச்சுக்காற்றுக்காக
வால்மார்ட்டை எதிர்பார்க்கிறோம்..

இன்னும் உன்னிடம் காந்தி தந்த
மூவர்ணக்கொடி எதற்கு?
ஃபேஷனாய் டி சர்ட்டில்
பொறித்த அமெரிக்கக் கொடியை
கோட்டை கொடிமரத்தில்
பறக்க விடுவோம்
அடிபணிந்து
வாஷிங்டன் இருக்கும்
திக்கு நோக்கித் தொழுவோம்.

லெமூரியாக் கண்டம்
இருந்ததா? இல்லயா?
ஓயாது கேள்வி
கேட்டுக் குடைகிறாய்..
ஏனென்று சொல்லப்பா..!!!

-சு.பொ.அகத்தியலிங்கம்













2 comments :

  1. Rathnavel Natarajan

    அருமை ஐயா.
    வெட்கமாக இருக்கிறது.
    இந்த கவிதையை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.
    Please avoid Word Verification which is a hindrance for making comments.

  1. Unknown

    இனியாவது உரைக்குமோ!!!

Post a Comment