நன்றி!போய் வா!

Posted by அகத்தீ Labels:




  •  
    நன்றி!போய் வா!


    பிறந்த நாள் காணும் பிள்ளையாரே
    லஞ்சம் கொடுக்காமல்
    பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியுமா உன்னால்?

    இருப்பிடச் சான்றிதழாவது
    யார் தயவுமின்றி வாங்க முடியுமா உன்னால்?

    உனக்கு ஊருக்கு ஒரு பெயர் வைத்து-நீ
    பாஸ்போர்ட் வாங்குவதையும்
    சிக்கலாக்குகிறார்களே உன் பக்தர்கள்..

    இந்த பக்தர்களிடம்
    எச்சரிக்கையாய் இரு விநாயகா!

    நீ
    கலகசாமி இல்லை என
    காவிகளுக்குச் சொல்!

    நீ
    போலிசாமியல்ல என
    பிள்ளைவரம் கேட்பவர்களிடம் சொல்

    நீ
    வினாத்தாள் விற்பனை சாமி இல்லை என
    தேர்வில் வெற்றி கேட்பவர்களிடம் சொல்!

    நீ
    கள்ளச் சாமிஅல்ல என
    கஜனாவை நிரப்ப வேண்டிடும்
    வியாபாரிகளுக்குச் சொல்!

    நீ
    மெளனசாமியாய் இருப்பினும்
    பேசத்தொடங்கிவிட்டால்
    சிக்கல் என்பதால் அல்லவா
    உன்னைக் கடலில் கரைக்கிறார்கள்.

    உன்னை உருவாக்கிய
    உழைப்பாளிக்கு
    இன்றொரு நாள்
    உணவளித்தாய்
    அதற்கு நன்றி!போய் வா!

    சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment