சொல்.58

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .58 [ 27 /10/2018 ]
குழந்தைகளுக்கு வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் ஏற்கப் பழக்குங்கள் .இப்படிச் சொன்னால் எதிர்மறையாகப் பேசுவதாக சிலர் கருதக்கூடும் . பாசிட்டிவ் பாசிட்டிவ் என ஒரு பக்கப் பார்வையை மட்டுமே மண்டையில் ஏற்றிவிட்டு ,பின் திடீர் தோல்வி வரும் போது துவண்டு போவதும் ; சில குழந்தைகள் தற்கொலைவரை போவதும் காண்கிறோம் . அப்படி பல அதிர்ச்சி சாவுகளைச் சந்தித்த அனுபவத்தில் சொல்லுகிறேன் , தோல்வியின் வலியையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்கிறேன் .

உங்கள் முகத்தில் கோபம் கொப்பளிப்பதைக் காண்கிறேன் . வகுப்பில் தோற்கச் சொல்கிறீர்களா ? இல்லை . முதலில் எப்போதும் ஃப்ர்ஸ்ட் ரேங்கில்தான் வரவேண்டும் எனச் சொல்வதை நிறுத்துங்கள் .முதலிடமோ அடுத்தடுத்த இடங்களோ எதுவாயினும் சரியே என சொல்லுங்கள் . இரண்டு , வெற்றி ,தோல்வி கவலையின்றி விளையாட்டு ,கலை ,இலக்கியம் என எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்கப் பழக்குங்கள் .

ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு மட்டம் தட்டவோ பாராட்டவோ வேண்டாம் .உங்கள் குழந்தையின் சிறிய முயற்சியையும் ஊக்கப்படுத்துங்கள் .விழுந்தால் எழ முடியும் என நம்பிக்கை ஊட்டுங்கள் .

உங்கள் குழந்தையோடு பயிலும் குழந்தை யாரேனும் தோற்றுவிட்டால் அவனோடு சேராதே எனச் சொல்லாதீர் .அந்தக் குழந்தைக்கு ஊக்கம் கொடுத்து அடுத்து முன் செல்ல வழிகாட்டுங்கள் .அதில் உங்கள் குழந்தையும் வாழ்க்கைப் பாடம் பெறுவார்கள் .

பள்ளிக்கு வெளியேயும் ஓர் உலகம் உண்டு .திருமணம் ,விழா,பயணம் ,எல்லாவற்றிலும் கற்க பாடம் உண்டு . எல்லா குழந்தையோடும் உங்கள் குழந்தை பழகட்டும் .நல்லதும் கெட்டதும் கற்கட்டும் .

எதையும் மறைக்காமல் தாய் தந்தையரோடு பரிமாற முடியும் என்கிற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் விழுந்தாலும் எழும் ஒவ்வொரு குழந்தையும் .
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment