நினைவலைகள்....3

Posted by அகத்தீ

 இன்று காலை ஓர் தோழர் அழைத்தார் அன்பான தோழர்கள் பலரை கொரானா கொண்டு போவதை எண்ணி வேதனை தாங்காமல் புலம்பினார். நானும் புலம்பினேன்.

புலம்பலூடே , "வாழும் போது உரிய அங்கீகாரமும் கொடுக்காமல் பாராட்டவும் செய்யமாமல் செத்த பிறகு வாழ்த்துப்பா பாடுவதைச் சுட்டி " அவர் வருந்தினார்.
அவரோடு உரையாடியதின் சாரம் கீழே!
நான் சொன்னேன் அதுவே உலக இயற்கை. இளம் வயதில் செயலில் வேகமும் புதுமையும் இருக்கும். நிறுவனமோ இயக்கமோ கட்சியோ அப்போது ஊக்கம் கொடுக்கும். அவர்களின் தேவை அது.நமக்கும் ஊக்கம் கூடும்.
நடுத்தர வயதை நெருங்கும் போது ஓர் செக்குமாட்டுத்தனம் வந்துவிடும். அதே நேரம் தேவையும் எதிர்பார்ப்பும் கூடிவிடும்.
உயர் மட்டம் எப்போதும் (விதி விலக்குகளைத் தவிர) தனக்கு கையடக்கமானவர்களையே துணை சேர்க்கும். விருப்பு வெறுப்பு ஒப்பீட்டளவில் மேல்மட்டத்திலேயே அதிகம் நிரம்பி வழியும்.
இந்தச் சூழலில் எந்தக் கட்சி ஆயினும் நிறுவனமாயினும் மேல்மட்டதோடு இணக்கமாகச் செல்ல முடியாதோரும், தவிர்க்க முடியாதபடி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாதோரும், மாற்றங்களூடே தன்னை மாற்றிக் கொள்ளாதோரும், விருப்பு வெறுப்பு வேண்டியவர் வேண்டாதவர் என்கிற காய்நகர்த்தலில் வெட்டப்படுவர் அல்லது ஓரங்கட்டப்படுவர். நீங்களோ நானோ அதில் விதிவிலக்கல்ல.எங்கும் எல்லா இடத்திலும் இதுவே விதி.
உங்களுக்கான ஓர் தனித்திறமை ஓங்கி நிற்பின் நீங்கள் அனைத்தையும்
மீறி சுடர்வீர். மேல்மட்ட அங்கீகாரம் அப்போது பிரச்சனையே அல்ல.
மரணத்திற்கு பின்னரும் நினைவுகூர அழுத்தமான காலடிச் சுவடுகளை பதிக்க முயல்வீர்! அதுவே மெய்யான அங்கீகாரம் தரும்! அல்லாதோர் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் கீழே இறங்கிய நொடியில் நினைவிலிருந்து மறைந்து போவது திண்ணம்.
உங்களின் குருதியில் கலந்த கொள்கைப் பற்றும் அதற்கான உங்களின் தனித்த பங்களிப்பும் மட்டுமே உரிய அங்கீகாரம். மற்றவை நாடக மேடை கிரீடமே!

நினைவலைகள்....2

Posted by அகத்தீ

 இன்று காலை ஓர் தோழர் அழைத்தார் அன்பான தோழர்கள் பலரை கொரானா கொண்டு போவதை எண்ணி வேதனை தாங்காமல் புலம்பினார். நானும் புலம்பினேன்.

புலம்பலூடே , "வாழும் போது உரிய அங்கீகாரமும் கொடுக்காமல் பாராட்டவும் செய்யமாமல் செத்த பிறகு வாழ்த்துப்பா பாடுவதைச் சுட்டி " அவர் வருந்தினார்.
அவரோடு உரையாடியதின் சாரம் கீழே!
நான் சொன்னேன் அதுவே உலக இயற்கை. இளம் வயதில் செயலில் வேகமும் புதுமையும் இருக்கும். நிறுவனமோ இயக்கமோ கட்சியோ அப்போது ஊக்கம் கொடுக்கும். அவர்களின் தேவை அது.நமக்கும் ஊக்கம் கூடும்.
நடுத்தர வயதை நெருங்கும் போது ஓர் செக்குமாட்டுத்தனம் வந்துவிடும். அதே நேரம் தேவையும் எதிர்பார்ப்பும் கூடிவிடும்.
உயர் மட்டம் எப்போதும் (விதி விலக்குகளைத் தவிர) தனக்கு கையடக்கமானவர்களையே துணை சேர்க்கும். விருப்பு வெறுப்பு ஒப்பீட்டளவில் மேல்மட்டத்திலேயே அதிகம் நிரம்பி வழியும்.
இந்தச் சூழலில் எந்தக் கட்சி ஆயினும் நிறுவனமாயினும் மேல்மட்டதோடு இணக்கமாகச் செல்ல முடியாதோரும், தவிர்க்க முடியாதபடி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாதோரும், மாற்றங்களூடே தன்னை மாற்றிக் கொள்ளாதோரும், விருப்பு வெறுப்பு வேண்டியவர் வேண்டாதவர் என்கிற காய்நகர்த்தலில் வெட்டப்படுவர் அல்லது ஓரங்கட்டப்படுவர். நீங்களோ நானோ அதில் விதிவிலக்கல்ல.எங்கும் எல்லா இடத்திலும் இதுவே விதி.
உங்களுக்கான ஓர் தனித்திறமை ஓங்கி நிற்பின் நீங்கள் அனைத்தையும்
மீறி சுடர்வீர். மேல்மட்ட அங்கீகாரம் அப்போது பிரச்சனையே அல்ல.
மரணத்திற்கு பின்னரும் நினைவுகூர அழுத்தமான காலடிச் சுவடுகளை பதிக்க முயல்வீர்! அதுவே மெய்யான அங்கீகாரம் தரும்! அல்லாதோர் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் கீழே இறங்கிய நொடியில் நினைவிலிருந்து மறைந்து போவது திண்ணம்.
உங்களின் குருதியில் கலந்த கொள்கைப் பற்றும் அதற்கான உங்களின் தனித்த பங்களிப்பும் மட்டுமே உரிய அங்கீகாரம். மற்றவை நாடக மேடை கிரீடமே!

நினைவலைகள்....1

Posted by அகத்தீ Labels:

 


கிண்டி மாடி அறை நினைவலைகள்....
கிண்டி ரயில் நிலையம் கேண்டின் அருகிருந்து அண்ணாந்து பார்த்தால்
ஒரு மொட்டை மாடியும் ஒற்றை அறையும் தெரியும்!
அந்த ஒற்றை அறை வரலாற்றுத் துகள்களைப் பேசும்.
தோழர் அண்ணாமலே கீழே குடியிருந்தார். மாடியில் யார் குடி இருந்தார் எனச் சொல்வது சிரமம். அது சிபிஎம் இளம் தோழர்களின் வேடந்தாங்ககலானது.
அங்கே நான் சந்தித்த பழகிய தோழர்களின் பட்டியல் மிகப்பெரிது.
விஜயன், ஹரிபரந்தாமன், ராஜாமணி,வி.பா.கணேசன், வரதராஜன், சின்னராஜு, ராதாகிருஷ்ணன், ஜீ.மணி நினைவுகள் நீள்கிறது.
ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த மாணவர் விடுதியில்தான் ஹரிபரந்தான் தங்கிப் படித்தார். ஐஸ் ஹவுஸ் அருகே அறநிலையத்துறை விடுதியில் கணேசன்.ஆனால் நான் குறிப்பிட்ட மாடி அறையில் பெரும்பாலான பொழுது கரைந்தது.
அவசரகால சிபிஎம் தகவல் தொடர்பு மையமாகவும் அவ்வறை திகழ்ந்தது. தோழர் ஏ.கே.பி அடிக்கடி வந்து போகும் அறை.
தேடப்பட்டு வந்த ஓர் நக்சலைட்டை அந்த மாணவர் விடுதியில் இரண்டு நாட்கள் தங்க வைத்ததும், அப்போது ஜீமணி முன்னெடுப்பில் இரவு முழுவதும் நக்சல் -சிபிஎம் என விவாதப் பொறி பறந்ததும் மறக்க இயலாதவை.
அந்த வேடந்தாங்கலுக்கு சந்துருவும் வந்து போவார். அவசரகால இருட்டிலும் சுவர் முழுக்க கட்சி முழக்கம். சுவரெழுதும்போது வந்த இரவு ரோந்து போலீசை சந்துரு அசால்ட்டாக மிரட்டி அனுப்பியதும் ; ஒரு முறை மகன் வீ பா கணேசனை சந்திக்க வந்த அவன் அப்பா கிண்டி ரயில் ரயில் நிலைய சுவரெழுத்தைப் பார்த்து என் மகனை இதுக்கா படிக்க வைக்கிறேன் என மனம் நொந்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
கட்சி, தத்துவம், காதல், சோகம், அமைப்பின் பிரச்சனை, இலக்கியம், புத்தகம் இவைகளைப் பரிமாறிக்கொண்டு டீயும் பட்டர் பிஸ்ட்டும் சாப்பிட்ட நாட்கள் அவை.
பின்னர் இருவர் நீதிபதி ஆகிவிட்டனர், கணேசன் அதிகாரி ஆகிவிட்டார்.விஜயன் மின் வாரியம் போனார், ராஜாமணி கொஞ்சம் தடம்மாறி மீண்டு வந்தார். ராதாகிருஷ்ணனும் மணியும் முழுநேர ஊழியர்கள்.விடை பெற்றுவிட்டனர்.
ஒரு நாவலுக்கான களம் அந்த மாடி அறையில் உண்டு. ஆனால் என்ன சிகப்பின் வாசம் ஒங்கி நிற்கும்!
ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டரில் அப்ரெண்டீஸாக இருந்த நான் பின் கட்சி ஊழியர் ஆனேன். இந்த அறை, பழவந்தங்கல், சைதாப்பேட்டை ஆகியவையே என் ஆரம்ப இடதுசாரி அரசியல் களமாகும்.
ஜீ.மணி இந்நினைவுகளை கிளறிவிட்டுவிட்டு விடைபெற்றுவிட்டான்..