[ 1 ]
கவித்துவமும் வலியும் மிக்க ‘பயணம்’.............
ஒரு நெடுங்கதை உள்ளிட்டு ஐந்து கதைகளின் தொகுப்பை
‘ பயணம்’ எனும் பெயரில் நம் கையில் தவழ விட்டிருக்கிற
அப்துல் நஜ்முதீன் எனும் அரோ கவிப்பிரியன் .ஐந்து கதையும் பெண்
மையச் சிந்தனையின் தெறிப்புகள் எனில் மிகை அல்ல .
இதில் பயணம் எனும் நெடுங்கதை ஓர் நடை பெற்ற சம்பவதின்
எதிரொலி ; செத்தவரை உயிரோடு உலவவிட்டு வேலை தேடி இடம் பெயரும் மக்களின்
வாழ்க்கை வலியை கவித்துமும் வலியும் கொப்பளிக்கும் நெடுங்கவிதை நடையில் எழுதி உள்ளார்
. “ அவன் நம்ம ஊர்க்காரன்தானே” , “அதுதான் எனக்குப்
பயம்” இந்த வரிகளில் கதையின் உயிர் முடிச்சு அவிழ்கிறது
. கடைசி வரி நெஞ்சைப் பிசைகிறது “ எல்லா கதைகளுக்கும்
/ இங்கே முடிவு கிடையாது / சில கதைகள்
/ உயிரோடு வெளியேறுவதிதான் / வெற்றி.”
பச்சையம்மாள் கிழவியும் ஒத்த ஆடும் அடித்தட்டு பெண்களிடம்
பொங்கி வழியும் பேரன்பும் அக்கறைக்கும் உயிர் சாட்சி
.” உயிரைப் பிரித்துக் கொடுக்கிறதுதான் / உண்மையான
தியாகம்” வரிகள் மட்டுமல்ல கதையும் பளிச் .
உறக்கத்தை இருட்டை மிகவும் பிடித்துப் போகும் அளவுக்கு
அவர் வாழ்க்கைப்பாடு . பெண்ணிய நோக்கில் ‘ உறக்கம் ‘ உரக்கப் பேசும் .
“ ‘பாட்டி ஜன்னல் வழியே உலகத்தைப்
பார்த்தாள்.அம்மா தையல் இயந்திரத்தின் வழியே உலகத்தைப் தைத்தாள்
.நான் எனது லென்ஸ் மற்றும் பேனா வழியே உலகிற்கு உரக்கச் சொல்கிறேன்.’பொன்னூலாடை’ என்பது சங்கிலி .அது
ஒரு விடுதலைப் பாலம்” என்கிறாள் சுலைகா . முஸ்லீம் சமுதாயம் ஒரு மூடுண்ட சமூகமாய் வாழ நிர்பந்திக்கும் சமூகச் சூழலில்
மெல்ல பரிணமிக்கும் விடுதலை உணர்வை அழகாய் இயல்பாய் கவித்துவமாய்ச் சித்தரித்திருக்கிற
அப்துல் நஜ்முதினுக்கு என் பாராட்டுகள் !
“ அரசியல் / மேடையில் தொடங்கல
/உயிரைக் காக்கும் / ஒரு சிறிய முடிவில்தான்
/ தொடங்கியது ….” மல்லிகாவிடம் , “ ஒரு தொழிலாளி / வர்க்க அரசியலைக் கற்றுக்கொள்ளும் போதுதான்
/ மனிதம் உயிர்த்தெழும்பும்” என்பதை வலுவாய்ச்
சொல்லுகிறது ‘நூல்’.
கவித்துவ மொழிநடை எழுத்தாளருக்கு நன்கு கை கொடுக்கிறது
.தெளிவான பாலின ,வர்க்க ,சமூகபார்வை வலு சேர்க்கிறது . தொடர்ந்து நுட்பமாகக் கதை எழுதினால் சிகரத்தைத் தொடலாம்
. வாழ்த்துகள் !
பயணம் , அரோ கவிப்பிரியன் , விலை : ரூ.120 / ,பக்கங்கள்
: 96
தொடர்புக்கு : 91
90803 29144
சுபொஅ.
[ 2 ]
கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள்
....
அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்ட வரியே இந்நூலின்
அறிமுகமாகிவிட்டது. ஒன்பது கதைகள் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட்துதான்
ஆயின் குட்டிச் சொல்ல வேண்டிய செய்தியைக் குட்டிக்கதையாய் கடத்திவிடுவது சிறப்பு
.
‘கனவைக் காத்த மனிதர்’ என்பது நூலின் தலைப்பு மட்டுமல்ல சிவப்புச் சட்டை தாத்தா ,ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா ,புத்தக மாமா என ஒவ்வொருவரும் அடை காக்கும் கல்வியின் கனவே இந்நூலின் ஆதார சுருதி
. ஏனைய கதைகளும் அதையொட்டியே .
இந்த கேரட்டர்களை வாழ்க்கையிலிருந்து எடுத்து தன்
கற்பனையில் சிறுவர்களுக்கு சொல்லத்தக்க வித்ததில் வடித்திருக்கிறார்
.
சிவப்புச் சட்டை தாத்தா என அவர் யாரைச் சொல்கிறார்
என்பதை நானறியவில்லை . அவர் வாழும் பகுதியில் மீஞ்சூரில்
தோழர் மாணிக்கம் என்பவரை நானறிவேன் . அவர் இறந்த போது பொதுசுடுக்காட்டில்
எரிக்க்க்கூடாது என மேல்சாதியினர் எதிர்த்தனர் . அதை மீறி அவரை
அங்கு கொண்டு சென்று எரித்தோம் . மேல் சாதிக்காரர்கள் கடையடைப்பு
நடத்தி கண்டனம் தெரிவித்தனர் . ஆனால் ஊரும் சேரியும் ஒன்றாய்த்
திரண்டு அவருக்கு இறுதி வழியனுப்பு நிகழ்வை மீஞ்சூர் கடைவீதி நெடுக நடத்தியது மறக்க
முடியாதது .
கல்வியை வலியுறுத்த சிவப்புச் சட்டை தாத்தா
, ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா மூவரும் கறாராக
இருந்தனர் .கடுகடுப்பைக் காட்டி விரட்டினர் .அது அன்றைய காலத் தேவை .அன்பைக் கொட்டும் புத்தக மாமா
அடுத்த தலைமுறையின் பரிணாமம் .
பிரச்சாரக் கதைகள் கண்டிப்பாய் தேவை
. நானும் சில எழுதினேன் ஒரு பதிப்பகம் வாங்கியது . வடிவமைத்துக் காட்டியது ; ஆனால் வெளி வராமல் போனது
. ஒரு வேளை வேறு யாரேனும் பின்னர் வெளியிடலாம் . அமுதன் தேவேந்திரனின் முயற்சி பாராட்டத் தக்கது . தொடர்க
இன்னும் கூர்மையாய் இன்னும் நுட்பமாய் இன்னும் வலுவாய் இன்னும் எளிதாய்…. வாழ்த்துகள் !!!
கனவைக் காத்த மனிதர் ,[
கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள் ], அமுத தேவேந்திரன் , விலை : ரூ.60
/ , பக்கங்கள் :ரூ. 56 /அறிவியல்
வெளியீடு ,94880 54683 / 97919 05003
சுபொஅ.





