Posted by அகத்தீ Labels:

 நன்கு வடிவமைத்துக் கொடுத்தத் தோழர் லெனின் முருகனுக்கு நன்றி 



Posted by அகத்தீ Labels:

 


வழுக்கைத் தலையில் மயிர் முளைக்க

ஆயிரம் முறை தைலம் தடவிய பின்னும்

இன்னும் தடவிக்கொண்டே இருக்கிறான்

நம்பிக்கையா ? அறியாமையா ?

 

சிகப்பழகு கிரீம் தடவித் தடவி முகம்

சிகப்பானதாகச் சரித்திரம் இல்லை

அனாலும் கிரீம் விற்பனை குறையவே இல்லை

வியாபார வெற்றியா ? அறியாமையா ?

 

எத்தனைமுறை குரு பெயர்ச்சி வந்தாலும்

நம் வீட்டில் மட்டும் எப்போதும் சனிப்பெயர்ச்சிதான்

கடன் வாங்கி பரிகாரம் செய்து கடனில் மூழ்கினும்

ஜோதிடப் பொய்மையை உணர்வதே இல்லை

 

எண்ணையோ வெண்ணையோ உண்மையோ பொய்யோ

ரீல் சொல்வதையே  வாங்கு ! ரீல் சொல்வதையே நம்பு !

ரீலில் உழன்று ரீலில் மூழ்கி ரீலில் செத்தால் சொர்க்கம் நிச்சயம்

அல்காரிதமே அனைத்தையும் ஆக்கும் கொடுங்காலம் ....

 

சுபொஅ.

12 / 05 /26 .

 

 

 



Posted by அகத்தீ Labels:

 



நம்பிக்கை பட்டுப்போன

முதுமையில்

பேரப்பிள்ளைகளுக்கு

தொலை தூரத்திலேனும் காட்ட

புள்ளியாய் கூட

ஒளிதெரியா இருட்டில்

நிகழ்காலத்தை மறந்து

கடந்த காலத்தில் வாழும்

ஞாபகமறதிநோய்கூட

நல்லதுதானோ !

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 


எதுவாயினும்

நியாயப்படுத்த

ஆயிரம் வார்த்தைகள் கிடைக்கும்

ஆனால்

நியாயமாக

ஒரே வழிதான்

அது

நியாயமாக இருக்க வேண்டும் .

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 


பகுதி கடந்து போய் உங்களால் சாதியை கடக்க முடியுமா?

மாவட்டம் கடந்து?

மாநிலம் கடந்து?

தேசம் கடந்து,

கண்டம் கடந்து

நிதர்சனம் இல்லை.

கரையான்போல இது....

 

சாதி பார்க்க மாட்டேன், எல்லோர் வீட்டிலும் சாப்பிடுவேன்என்பதின் உள்ளார்ந்த அர்த்தம் ….நேரடி அர்த்தம் என்ன?

 

உங்கள் last name என்ன?

நீங்கள் vegetarian?

Non veg ?

அப்ப Beef சாப்பிடுவீர்களா?

நீங்கள் என்ன ஆள்கள்?’ என்பதின் இரண்டாம் அடுக்கு கேள்விகள் இவையே.

 

ஆனால் நான் கண்டது என்னவென்றால்

சாதி ஒருபோதும் மறையவில்லை.

அதை நேரடியாக கேட்கும் துணிவு மட்டும் சிலரிடம் குறைந்திருக்கலாம். 

 

 

என் மகள் பானுநவீன் எழுதிய கவிதை அதிர்ச்சி அல்ல உறுத்தும் உண்மை . கடல் கடந்து கனடா போனாலும் அங்கேயும் தூக்கிச் சுமக்கும் சாதியம் கண்டு அவள் எழுதியதை இங்கு பகிர்ந்திருக்கிறேன் . அவள் என்னோடு உரையாடும் போது சொல்லும் செய்திகள் இன்னும் கொடுமையானவை . சாதியம் எங்கும் ஏதோ ஓர் வடிவத்தில் மென்மையாகவோ வண்மையாகவோ …. நம்முன் உள்ள சவால் .

 

சுபொஅ.

08 /05 /26.

 

 

 


தோழமையான அறிவிப்பு

Posted by அகத்தீ Labels:

 


தோழமையான அறிவிப்பு

 

அன்பான தோழர்களே !

வணக்கம் .

நாளை தேர்தல் முடிவுகள் வந்துவிடும் . திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் .எனக்கு ஐயமில்லை.  

மாநில அரசு புதிய சூழலை , புதிய சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் .

ஒவ்வொரு கட்சியும் மக்கள் நலன் சார்ந்து போராட்டங்களையும் பரப்புரைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .

பாசிச அபாயம் தொடர்வதையும் ; மாநில உரிமைகள் ஆபத்தானக் கட்டத்தை நெருங்குவதையும் ; ஜனநாயக  சமூகப்  பொருளாதாரப்  பண்பாட்டு நெருக்கடிகள் முற்றுவதையும் ; முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட வேண்டும் . 

 

நான் தமிழ்நாட்டில் இப்போது குடியிருக்கவில்லை . நேரடி அரசியல் பங்கேற்பும் இல்லை . சமூக வலைதளங்களில் முடிந்தவரை இயங்கி வந்தேன் . இனி இதில் என் பணியை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன் .

 

ஏனெனில் என் நெடுநாள் கனவான  ஒரு எழுத்துப் பணிக்கு திட்டமிட்டு வருகிறேன் .அதற்கு நிறைய வாசிக்க வேண்டி உள்ளது . தயாரிக்க வேண்டி உள்ளது . நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது . எனவே சமூக வலைதளங்களில் உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள விழைகிறேன் .

 

தேவைப்படும்போது சந்திப்பேன் .

 

நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

03 /05 /26 .


இன்ஸ்டாகிராம் லைப்…

Posted by அகத்தீ Labels:

 


இன்ஸ்டாகிராம் லைப்…

 

ரீல்ஸ்களில் காதலித்து

ரீல்ஸ்களில் குடும்பம் நடத்தி

ரீல்ஸ்களில் பெரியாளாகி

ரீல்ஸ்களில் அரசியல் பயின்று

ரீல்ஸ்களில் மாற்றம் கண்டு

ரீல்ஸ்களில் புலம்பித் தீர்த்து

ரீல்ஸ்களில் முடிந்து போகும் நண்பா ! நண்பி !

ரியல் எதுவென கொஞ்சமேனும் தேடு !

 

சுபொஅ.

27 /04 /26 .