சொல் 8

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 8  [ 29 /8/2018 ]

விட்டுக்கொடுத்தல் ,சமரசம் ,சரணாகதி மூன்றும் வெவ்வேறு ; மூண்றையும் போட்டுக் குழப்பிக் கொள்வதால் தலைவலி திருகுவலி ஆகிவிடும் .

ஒரு காதல் திருமணம் .சாதி மறுப்பு திருமணம் .வரதடசணை இல்லா திருமணம் .பெற்றோர் ஒப்புதலுடன் நடப்பதே பெரிய வெற்றி . அதற்காக கொள்கையை சற்று தளர்த்தி சில சடங்குகளை  ஏற்றுக்கொள்வது விட்டுக்கொடுத்தல் .இது பிழை அல்ல .தேவை .

குடும்ப வாழ்வு இனிதாக சில விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கவே முடியாது .

முதலாளியை எதிர்த்து தொழிலாளி சில கோரிக்கைகளுக்காக போராடும் போது ஒரு கட்டத்தில் சமரசம் தேவைப்படும் .போராட்டமும் சமரசமும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் இணைந்ததே . சமரசம் இல்லா போராட்டமோ ,போராட்டமே இன்றி சமரசமோ ஒரு போதும் இல்லை.

கேள்விமுறையின்றி ஆதிக்கத்துக்கு அடிபணிதலே சரணாகதி . ஆபத்தானது இதுவே !

விட்டுக் கொடுத்தல் வாழ்வின் ஒரு விதி  .

விட்டுக்கொடுத்தலை சரணாகதிகாகச் சித்தரித்து பகடி செய்வதும் ; சரணாகதியை விடுக்கொடுத்தலாக நியாயப்படுத்துவதும் நட்பு முரணை பகை முரணாக்கிவிடும் .
இன்றைய விவாதக் களத்தில் இந்த பேராபத்து மேலோங்கி உள்ளது .

விட்டுக்கொடுத்தல்,சமரசம் ,சரணாகதி இவற்றை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளுதல் ; போராட்ட குணத்திற்கு வலுவும் . தொலை நோக்கும் கொடுக்கும் .


















 “












0 comments :

Post a Comment