சொல். 20

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .20 [ 14/09/2018 ]  

அழகு படுத்திக் கொள்ள பெண்கள் அதிகம் மெனக்கிடுகிறார்கள் .காசும் செலவு செய்கிறார்கள் என்பது பொதுவாக வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை .

ஆண் தன் முகத்தை மழிப்பது ,மீசை தாடியை ஒழுங்கு செய்வது எல்லாம் அழகின் ஒரு கூறுதானே . இன்றைய நுகர்வு உலகில் அழகு சாதனப் பொருட்களில் ஆண்களுக்கானதும் நிறைய வந்துவிட்டதே !

ஆணோ ,பெண்ணோ தன்னை ஒப்பனை செய்து கொள்வது குற்றமல்ல .தேவையும்கூட .நம்பிக்கையையும் மிடுக்கையும் அது கொடுக்கக்கூடும் .

ஒருவரின் தோற்றப் பொலிவு அவருக்கான அடையாளமாய் இருக்கும் விதத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்வதின் தேவையை யாரும் மறுதலிக்கவே முடியாது .

ஆயின் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் சிக்கல்தான் . விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் . அந்த அளவை யார் தீர்மானிப்பது ?

ஆணோ ,பெண்ணோ அவரவரே தீர்மானிக்க முடியும் . அடுத்தவர் இதில் மூக்கை நுழைப்பது அநாகரீகமே!

அழகாய் இருக்க முயலுங்கள் ! புற அழகு மட்டுமே ஈர்ப்பாகாது என்பதையும் உணருங்கள் !





0 comments :

Post a Comment