சொல்.31

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .31 [ 29/09/2018 ]

தேங்கிய குட்டை நாறும் .ஓடுகிற தண்ணிக்கு சூதகம் இல்லை .என்பது சொல்வழக்கு .இயங்கிக் கொண்டே இரு என்பதே இதன் சாரம் .

சமூகமாயினும் தனிமனிதராயினும் இயங்கிக் கொண்டே இருப்பது மிகமிக அவசியம் .இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் பொருள் , வெறுமே தின்று விளையாடி இன்புற்றிருப்பதுவோ ? அல்லவே அல்ல .தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது என்பதே பொருள் .

தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பது என்பதன் பொருளென்ன ? நடை ,உடை ,நவீன கம்யூட்டர் ,லேப்டாப் ,ஸ்மார்ட் போண் என புதுப்பித்துக் கொள்வது மட்டுமே புதுப்பித்தலாகாது .

இப்படி நவீனமானவர்கூட சாதியம் ,பாலின பாகுபாடு ,பண்பாடு என அனைத்திலும் படுபிற்போக்காய் இருப்பின் அதனால் என்ன பயன் ? மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசிடின் என்ன பயன் ?

சிந்தனையைப் புதுப்பித்துக்கொண்டே இரு !திறந்த மனதோடு எதையும் பார்க்கப் பழக்கிக் கொண்டே இரு ! உறுதியாகத் தெரியாத போது MAY BE OR MAY NOT BE அதாவது இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கலாம் எனச் சொல்லப் பழகு !

அறிவைத் தேடிக்கொண்டே இரு ! அநீதியை எதிர்த்துக் கொண்டே இரு ! பிதுப்பித்தல் என்பதன் மெய்ப்பொருள் அதுவே !






















 .





0 comments :

Post a Comment