சொல் .14.

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் … 14 [ 4 /9/2018 ]

எளிமை ,ஆடம்பரம் என்பதற்கு நிரந்தர அளவுகோல் ஒன்றுமில்லை .காலந்தோறும் மாறும் . ஊருக்கு ஊர் ,நபருக்கு நபர் மாறும் .

காந்தி ,காமராஜ் வாழ்ந்த காலம் வேறு ; இன்றையக் காலம் வேறு .

ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தோழர் இஎம்எஸ் சொன்னார் . “நாங்கள் கம்யூனிஸ்டுகள் ,ஆனால் எங்கள் தலைமுறை காந்தியிடமிருந்தே எளிமையைக் கற்றுக்கொண்டது . இன்றையத் தலைமுறை அதனை அப்படியே பின்பற்றுவது இயலாது ; தேவையுமில்லை .”

கதர் ஒரு காலத்தில் எளிமை ;இன்று ஆடம்பரம் . ரெடிமேட் ஒரு காலத்தில் ஆடம்பரம் இன்று அதுவே எளிமை .வானொலிப் பெட்டியே ஒரு காலத்தில் ஆடம்பரம் ; இன்று டிவியே ஆடம்பரமல்ல தேவையாகிவிட்டது .

தேவைக்கும் ஆடம்பரத்திற்குமான கோடு கூட மாறிக்கொண்டே  இருக்கிறது .

ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பில் அவரவர் சக்திக்கு உட்பட்டு நன்கு உடுப்பதோ ; உண்பதோ ; பொருட்கள் வாங்குவதோ ஆடம்பரம் ஆகாது .

ஊரார் உழைப்பில் – ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தில் – தேவைக்கு சம்மந்தமே இன்றி வாங்கிக் குவிப்பதும் ; மினிக்கித் திரிவதுமே ஆடம்பரம் .

அட, “ ஊரன் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே” என்பதுதானப்பா ஆடம்பரம் .அநீதி.அராஜகம்.































































                                                                                      




 













0 comments :

Post a Comment