சொல் 5

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 5 [ 26 /8/2018 ]

ஒரு நாத்திகர் / பகுத்தறிவாளர் எவ்வளவு பிடிவாதமாய் கொள்கை உறுதியோடு இருப்பினும் வாழும் சமூகத்தில் சில சமரசங்களுக்கு ஆட்படுவது தவிர்க்கவே இயலாது .

இது சறுக்கல் அல்ல ; அது குடும்ப ஜனநாயகம் ,சபை நாகரீகம் , சமூக நல்லிணக்கம் என எதுவாகவும் இருக்கலாம்

ஆனால் ,அதனைச் சுட்டி அவர் பகுத்தறிவு போலியானது என முரட்டு ஆத்திகர் ஒரு புறமும் ;  கொள்கை நழுவிவிட்டார் என வறட்டு நாத்திகர் மறுபுறமும் அவரை வறுத்தெடுப்பர் .

சாராம்சத்தில் இருவரும் அவரை ஆத்திக சகதியில் தள்ளிவிடும் கைங்கர்யத்தையே செய்கின்றனர் .

எந்த ஆத்திகனாவது தலைவலி எனில் தைலம் தேடாமல் இருக்கிறானா ? பிரச்சனை எனில் போராடாமல் இருக்கிறானா ?

எல்லாம் அவன் செயல் என துரும்பையும் அசைக்காமல் இருக்கும் ஆத்திகர் எவரேனும் உண்டா ?

இதனால் எல்லாம் அவர் ஆத்திகத்தை கைவிட்டுவிட்டார் என எந்த நாத்திகரும் சொல்வதில்லை ; ஏனெனில் சமூக யதார்த்தம் அறிந்தவர் நாத்திகர் .
ஆத்திகரிடம் அந்த அணுகுமுறையை , நேர்மையை எதிர்பார்க்க இயலுமோ ?








0 comments :

Post a Comment