சொல்.32

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .32 [ 30/09/2018 ]

கூழானாலும் குளித்துக்குடி என்று சொன்ன அவ்வையே சனி நீராடு என்றும் சொல்லி இருக்கிறாள் . எதைச் செய்வது ? எது நம் பண்பாடு ? இது ஒரு நண்பரின் குதர்க்கக் கேள்வி .நான் சொன்னேன் . தண்ணீர் வசதி மிக்க இடத்தில் முன்னதைச் செய் ! வறட்சிப் பிரதேசத்தில் பின்னதைச் செய் !

பதில் சொன்ன பின்னும் மனம் ஏதோ குடைந்துகொண்டே இருந்தது . குளித்தல் வாழ்வியல் தேவை .ஆனால் யார் எப்போது குளிக்க வேண்டும் என்பதை அவரவர் சூழலே முடிவு செய்யும் .

கோயில் பூஜாரி குளித்துவிட்டு பணியைத் தொடங்குவது அவரின் தேவை .விவசாயி அப்படி குளித்துவிட்டு வயலுக்கு போவாரா ? வயல் வேலையை முடித்துவிட்டு குளிப்பாரா ?காவிரிக்கரையோரம் இருப்பவர் முங்கிக் குளிக்க விரும்புவர் . வாய்ப்பும் முன்பு இருந்தது .சென்னைவாசி ஒரு வாளித் தண்ணியில் குளித்துப் பழகியாக வேண்டும் .

குளித்தல் ஒவ்வொருவருக்கும் அவர் வாழும் சூழல் ,பணி ,தேவை , உடல்கூறு என பல்வேறு அம்சம் சார்ந்தது .அதற்கு புனித முத்திரை குத்துவதும் ; சாதிய ஒழுக்கமாய் பெருமை பீற்றுவதும் அயோக்கியத்தனம் .

குளித்தல் ஆரோக்கியக்கூறாகப் பார்ப்பின் பிரச்சனை இல்லை .அதற்கு மதத்தின் புனித பூணூல் அணியும் போதே வெறுப்பின் விதை தூவப்படுகிறது .குளித்தல் நம் தேவை ,உரிமை ,வாய்ப்பு அவ்வளவுதான்.

























 .





0 comments :

Post a Comment