சொல்.23.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .23 [ 18/09/2018 ]

நண்பர் ஒருவர் சொன்னார் , “ நாங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை இரவு உணவின் போது தொலைகாட்சியை ,அலை பேசியை நிறுத்திவிட்டு ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடப் போகிறோம் .”

வேடிக்கைக்காகச் சொன்னாரோ , மெய்யாகச் சொன்னாரோ நான் அறியேன் . உரையாடல் இல்லாமல் குடும்பத்தில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்டது என்பது உண்மையே .

ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் ஏதேனும் அவசியத் தேவையைக் கேட்பதைத் தவிர வேறு என்ன உரையாடல் நிகழ்கிறது ? பார்த்த சினிமா ,கேட்ட பாடல் , சுற்றி  நிகழ்பவை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் வீட்டில் நடக்கிறதா ?

தொலைகாட்சியும் ,அலைபேசியும் இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாததுதான் .ஆயினும் மனம்விட்டு உரையாடுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை ,புரிதலை இழக்கலாமா ?

சாப்பிடும் போது பேசக்கூடாது என்கிற பழைய பழக்கத்தை துடைத் தெறியுங்கள் ! பேசிக்கொண்டே உற்சாகமாக கூடிச்சாப்பிடப் பழகுங்கள் !

வீட்டுக்குள் உரையாடல் உற்சாகமாக நடக்கட்டும் அது பல சிக்கலின் முடிச்சுகளை அறுத்துவிடும் .சரிதானே !

                                  





 .





0 comments :

Post a Comment