சொல்.30

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .30 [ 28/09/2018 ]

சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என ஐந்து பேரிடம் கேட்டால் ஐந்து பதில் வரும் .ஏனெனில்  ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொருவிதமாய் பழகிவிட்டது .

அறுசுவை என சொல்லிவிட்டு அதில் எது சுவை இல்லை என்பீர் ? பாவற்காய் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது . சிலருக்கு இனிப்பு ,சிலருக்கு புளிப்பு ,சிலருக்கு காரம் , சிலருக்கு துவர்ப்பு ,சிலருக்கு உவர்ப்பு ,சிலருக்கு கசப்பு என சுவை மாறுபடும் .

ருசியாகச் சமைப்பதும் ; ருசித்துச் சாப்பிடுவதும் தனிக்கலை .அது வாய்க்கப் பெறுவது பெரும் பேறு . அதே சமயம் நாக்கு ருசிக்கு அடிமையாகி கொஞ்சம் குறைந்தாலும் தொண்டைக் குழியில் இறங்காது என்பது அதீதம் .

அம்மாவோ ,மனைவியோ ,கணவனோ அல்லது யார் சமைத்தாலும் ஒருநாள் போல் ஒருநாள் அமையாது .ஏதோ காரணம் இருக்கக்கூடும் . இதனைப் புரியாமல் சாப்பாட்டின் மீது வெறுப்பைக் காட்டுவது அறியாமையின் உச்சம் மட்டுமல்ல ;ஆணாதிக்கத்தின் உச்சமும்கூட .இது பெண்களிடமும் வெளிப்படக்கூடும் .

ஒரு கவளம் சோறுகிடைக்காமல் துடிக்கும் பல்லாயிரம் மக்களின் வலியை ஒரு நிமிடம் நெஞ்சில் நிறுத்துங்கள் .

கிடைத்ததை ருசித்துச் சாப்பிடுங்கள் . எப்படியும் ஆறு சுவையில் ஒன்றாகத்தானே இருக்கும் .பாராட்டுங்கள் .வாழ்க்கை நரகமல்ல நந்தவனம் என்பது புலனாகும் .


















 .





0 comments :

Post a Comment