சொல் .25

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .25 [ 20/09/2018 ]  

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் எங்கேயும் இருப்பார்கள் .தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது அவர்கள் நினைப்பு .அவர்கள் மூக்கை நுழைக்காத விவகாரம் எதுவும் இருக்காது .

நீங்கள் கூப்பிடவே வேண்டாம் .அவகளாகவே வந்து ஆலோசனைகளை அள்ளிவீசுவார்கள் .ஒரு சிலர் மேலே ஒருபடி போய் தேரை இழுத்து தெருவில் விட்டதுபோல் சிக்கலில் மாட்டிவிடுவார்கள் .

இவர்களைச் சமாளிப்பது பெரும் கலை .முக தாட்ச்சண்யம் பார்க்காமல் கறாராக சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை .

உங்கள் ஆலோசனைக்கு நன்றி ! நாங்கள் என்ன செய்வது என விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.உங்கள் உதவி தேவைப்படும் போது நிச்சயம் கூப்பிடுவோம் .இப்படி உடைத்துச் சொல்லப்பழக வேண்டும் .

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் தெரிந்ததுபோல் நடப்பதே சிக்கல் என உணர்வோம்.உணர்த்துவோம்.









 .





0 comments :

Post a Comment