சொல் 12

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் … 12 [ 2 /9/2018 ]

இவன் என் முதல் தாரத்தின் மகன் ; இவள் எனது இளைய தாரத்தின் மகள் . இப்படி பொது வெளியில் ஒரு ஆணால் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது .சமூகமும் முகத்தைச் சுழிக்காமல் தலையை ஆட்டி ஏற்கிறது .

ஆனால் விவாகரத்து அல்லது முதல் கணவரை இழந்ததால் மறுமணம் செய்துகொண்ட ஒரு பெண் ; இவன் என் முதல் கணவரின் மகள் .இவன் எனது இரண்டாவது கணவரின் மகன் என பொது வெளியில் அறிமுகம் செய்து கொள்ள முடியுமா ? அப்படியே சொன்னாலும் அவளை பழித்துப் பேசாமல் சமூகம் இருக்குமா ?

கணவனைத் தவிர வேறு எந்த ஆணாயினும் அண்ணன் ,தம்பி , என ஏதேனும் உறவை வலியத் திணித்தே பெண் பழக முடியும் ; மாறாக இவன் என் நண்பன் என அவள் சொல்லிப் பழகின் அவளை ஏற இறங்கப் பார்க்கும் சமூகமல்லவா இது .ஆணையும் பெண்ணையும் ஒரே போல் சமூகம் நடத்துவதே இல்லையே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவுகோல்களை நம் மூளைக்குள் திணித்தது எது ? யார் ?

மதம் ,சாதி,சடங்கு ,சம்பிரதாயம் ,பண்பாடு என காரணம் எதுவாயினும் அது மண்ணாய்ப் போக ! மண்ணாய்ப் போக ! பாலின சமத்துவ சிந்தனை ஓங்குக!


































 “












0 comments :

Post a Comment