சொல். 17

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .17 [ 7/09/2018 ]   

பெய்ர்த்தி மேகாவை எப்போது  கையில் எடுத்தாலும் என் மீசையைப் பிடித்து உலுக்குவதிலேயே குறியாய் இருக்கிறாள் . என்ன கேட்க நினைக்கிறாள் ?

 “ தாத்தா ! பெண் உரிமை ,சமத்துவம் நிறையப் பேசுகிறாய் ,  வாழ்க்கையில் வீட்டில் எப்படி ?”

 “ மேகா! சரியாகக் கேட்டாய் . சொல்லுவது மிகவும் எளிது ;சொன்னபடி நடப்பதுதான் அரிது .நான் வாழ்க்கையில்,வீட்டில் பாலின சமத்துவம் பேண முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் .

பல முறை தோற்றிருக்கிறேன் ,சறுக்கி இருக்கிறேன் .மீண்டும் மீண்டும் விடாது முயன்றுகொண்டே இருக்கிறேன் . மேகா! உங்கள் காலத்தில் பெரு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!”

நரம்போடும் ரத்த அணுக்களோடும் உறைந்து போயுள்ள ஆணாதிக்கம் அவ்வளவு சீக்கிரம் உதிர்ந்துவிடாது ; தொடர்ந்து உள்ளும் புறமும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் . சரிதானே!

0 comments :

Post a Comment