சொல் 6

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 6 [ 27 /8/2018 ]

கணவனுக்கும் மனைவிக்கும் பிடித்த பாடல் .பிடித்த இசை ,பிடித்த நிறம் ,பிடித்த சுவை , பிடித்த வாழ்க்கைக் கூறுகள் என எதுவும் ஒரேப் போல் இருப்பதில்லை .இருக்க வேண்டிய அவசியமும் இல்லை .

அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே ரசனை, ஒரே தேர்வும் இருப்பது அபூர்வம் .

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே போல் ஆர்வமும் .ஈடுபாடும் இருப்பதில்லை . வீட்டிலுள்ள இதர உறவுகளும் அப்படியே !

குடும்பம் என்பது ஒரே வண்ணமல்ல ;பல வண்ணங்களின் சேர்க்கை. வானவில்லாய் எல்லா வண்ணமும் இணைந்தும் ; தன் சுயம் இழக்காமலும் காட்சி அளிப்பதே நல்ல குடும்பம் .

ஒற்றை வண்ணமாய் ஆக்க முனையும் போதே விரிசல் வேர்விடத் தொடங்கிவிடும் .

வானவில் ரசிப்பதற்கு மட்டுமல்ல ;வாழ்க்கையும்தான் .




 “












0 comments :

Post a Comment