பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

Posted by அகத்தீ Labels:

 


உன் கொள்ளுத் தாத்தா பாட்டி போன்றா நீ வாழ்கிறாய் ? இல்லவே இல்லை ! அதனினும் மேம்பட்ட வாழ்வுதான் உன்னுடையது.

அடங்கிப் போயா இதனை நீ பெற்றாய் ? இல்லவே இல்லை .

உன் கொள்ளுத் தாத்தாவை உன் தாத்தா மீறினார் ,

உன் தாத்தாவை உன் அப்பா மீறினார் ,

உன் அப்பாவை நீ மீறினாய் ,

உன்னை உன் வாரிசுகள் மீறுகிறார்கள் ,

நாளை அவர்களை அவர்களின் வாரிசுகள் மீறுவார்கள் .

இதுதான் வாழ்க்கை .

 

எல்லாம் மாறும் . மாறதது எதுவுமில்லை.

மாறாத பண்பாடோ ,பழக்க வழக்கமோ ,உணவோ ,உடையோ ,நாகரீகமோ ,கல்வியோ , அறிவோ ,மருத்துவமோ , மனோநிலையோ ,புனைவோ ,கனவோ எதுவுமில்லை .எல்லாம் மாறும் .

அடக்குமுறை ,பாசிசம் ,ஜனநாயகம் , நியாயங்கள், ஒடுக்குமுறை ,சிம்மாசனங்கள் எல்லாம் மாறும் .ஆம் எல்லாம் மாறும் !

தகர்க்க முடியாத சிம்மாசனங்களும் கொடுங்கோல்களும் எங்கும் இல்லை .

 

தேவையற்ற பஞ்சாங்கப் பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

புத்தம் புதிய சிந்தனைக்கு உரம் போடுக !

தொடரும் மனிதகுல வரலாற்றுச் சங்கிலியில் நீயும் ஒரு கண்ணி ! அவ்வளவுதான்….

 

போகியோ போகி !

 

சுபொஅ.

13/01/2024.

0 comments :

Post a Comment