ஜனவரி 30 .

Posted by அகத்தீ Labels:

 


ஜனவரி 30 .

 

மகாத்மா !

உன் நவகாளி யாத்திரை

முடியவில்லை !

 

கோட்சேக்களும்

சாவர்க்கர்களும்

அதிகார பீடத்தில் !

 

மானுட அன்பும்

மதநல்லிணக்கமும்

பலிபீடத்தில் !

 

தரித்திர நாரயணர்கள்

சாக்கடைப் புழுக்களாய்

அதிகாரத்தின் காலடியில் !

 

உன் ராமர் அன்பானவர்

இன்றைய ராமர் அதிகார

முகமூடியாகிப் போனார் !

 

அதிகாரப் பொய்களிடையே

பாமர உண்மையைத்

தேடிக்கொண்டிருக்கிறோம் !

 

கோட்சே முதல்

பிரதான் ராம் சேவக் வரை

தொழுத கையுள் …. ???

 

மகாத்மா ! போராட

எங்களுக்கு

ஆன்ம பலம் தா !

 

சுபொஅ.

30/1/24.

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

 [ குறள் : 828.]

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

[கலைஞர் உரை ]

 

 


0 comments :

Post a Comment