எலிப்பொறி வடைசாமி'

Posted by அகத்தீ Labels:

 

இடிப்புசாமி
பிறன்மனை புகுந்திட
பெருஞ்சாமி இவரென
சிம்மாசனசாமி
உத்தரவு போட
ஆமாம்சாமி
தலையாட்டிசாமி
பொம்மலாட்டசாமி
கூலிக்கு மாரடிக்கும் சாமி
எல்லோரும்
கும்பிடுறோம்சாமின்னு
சொல்ல
கூழுச்சாமி வேலைச்சாமி
ஜனச்சாமி நியாயச்சாமி
மனுஷச்சாமி எல்லோரும்
'எலிப்பொறி வடைசாமி'ன்னு
வாய்பொத்தி சிரிக்காங்க
ஏன்சாமி ?
சொல்லுங்க குலசாமி!
சுபொஅ.

0 comments :

Post a Comment