பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

Posted by அகத்தீ Labels:

 





பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

 

 

 

 சிந்துவெளி அகழ்வினலே நீ சிரித்தாய் -அதை

சங்கத் தமிழ் ஆழத்திலே எதிரொலித்தோம்

கீழடி வைகை பொருணை வழி படித்தோம்

வாழும் பண்பாட்டின் நாடித்துடிப் பறிந்தோம்

 

 வள்ளுவனின் முப்பாலில் உயிர் தரித்தோம்

வையத் தமிழ்மொழி வாழக் கவிபடித்தோம்

யாவரும் கேளிரெனபாரெங்கும் முரசடித்தோம்

 பசிப்பிணி அறுகவெனபகிர்தல் அறமுரைத்தோம்

 

 சுழன்றும் ஏர்பின்னது உலகு என்றோம்அங்கே

உழவினார் கைமடங்கின் துறவுமில்லை என்றோம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றோம்

அல்லவைதேய அறம்பெருக நல்லவை செய்வோம்!

 

உணவென படுவது நிலத்தொடு நீரே என்றோம்

உலகம் உய்யும் வாழ்வியல் ரகசியம் சொன்னோம்

பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

மீட்டுக தமிழ்ப்பண்ணை ! மீட்டுக தமிழர் வாழ்வை !

 

தை தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

வளம் கொழிக்க உழவர் திருநாள் வாழ்த்துகள் !

தமிழர் பெருமிதம் திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள் !

மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் !

காணும் பொங்கல் வாழ்த்துகள் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

[15/01/2024.] தை முதல் நாள் ,திருவள்ளுவராண்டு 2055.


0 comments :

Post a Comment