காலநிலை மாற்றம் !

Posted by அகத்தீ Labels:

 


காலநிலை மாற்றம் !

 

பிரம்ம முகூர்த்தத்தில்

அயர்ந்துறங்க வேண்டிய

நாய்கள் ஊளையிட்டு

சண்டை இடுவது ஏன் ?

 

காலையில் கூவும் சேவல்

மாலையில் மதியத்தில்

நினைத்த நேரத்தில் எல்லாம்

கூவுவது ஏன் ?

 

மாலையானதும் கூடு நோக்கி

பறக்கும் பறவைகள்

நள்ளிரவிலும் ஜன்னலில் அமர்ந்து

குளிரில் நடுங்குவது ஏன் ?

 

நள்ளிரவிலும்

காதை செவிடாக்கும்

சத்ததுடன் மோட்டர் பைக்கை

ஓட்டிச் செல்வது ஏன் ?

 

வீடுகளில் இரவு நேரம்

துவங்கும் சண்டைகள்

வார்த்தைப் போர்கள்

விடிய விடிய நீளுவது ஏன் ?

 

இரவும் பகலும் தூக்கம் வராததால்

சும்மா கிடக்கும்

முதியவருக்கு இதை எல்லாம்

யோசிக்கத் தோன்றுகிறதோ ?

 

சுபொஅ.

19/01/2025.


0 comments :

Post a Comment