நீ யோசி !

Posted by அகத்தீ Labels:

 

வெயில் காலத்தில்
அய்யையோ அனல் பறக்கிறது
தாங்க முடியவில்லை
என புலம்புகிறாய் …

மழை காலத்தில்
அப்பப்பா விடாத அடை மழை
கடை கண்ணிக்குகூட போகமுடியலை
என கண்ணீர்விடுகிறாய்…

குளிர்காலத்தில்
ஆத்தாடி குளிர் எலும்பைத் துளைக்குது
போர்த்திட்டு படுக்கலாம் போல இருக்கு
என நடுங்குகிறாய்…

எல்லா காலமும் எப்போதும்
வசந்தமாய் இருக்க முடியுமா ?
பருவச் சுழற்சி நின்றுபோனால்
இந்த பூமி தாங்குமா ?- நீ யோசி !

மாறிக்கொண்டே இருக்கும் பருவத்தோடு
ஓடிக்கொண்டே இருப்பதே வாழ்க்கை
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் – நீ
வருந்தாத நாளொன்றைச் சொல் ..

சுபொஅ.
17/4/2023.



All reacti

0 comments :

Post a Comment