முழுசாக நனைந்த பின்

Posted by அகத்தீ Labels:

 


முழுசாக நனைந்த பின்

முக்காடு எதற்கு ?

அனுபவச் செறிவு மிக்க

கேள்விதான்.

ஆளுநருக்கும்

நீதியரசருக்கும்தான்

புரியவில்லை…

 

தப்பு ! தப்பு !

தூங்குபவனைத்தான்

எழுப்ப முடியும்

நடிப்பவனை அல்ல.

 

விஷக் கொடுக்குகளில்

வண்ணம் பூசியிருந்தாலும்

வாசம் தூவி இருந்தாலும்

தேளின் கொடுக்கு விஷம்தானே !

 

சுபொஅ.16/4/2023.


0 comments :

Post a Comment