இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

Posted by அகத்தீ Labels:

 


எல்லா புத்தகங்களையும் வாங்கியதும் படித்து விடுவதில்லை . தெரிந்தே சில புத்தகங்கள் மாதக் கணக்காய் காத்திருக்கும். சில கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ளும்.

 

2022 நவம்பர் மாதம் நான் தஞ்சை போயிருந்த போது  களப்பிரன் அந்த சிறிய நூலைக் கொடுத்தார் . அது எப்படியோ  என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு புத்தகத்துக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டது .நானும் மறந்தே விட்டேன்.

 

நேற்று வேறொரு புத்தகத்தைத் தேடும் போது கண்ணில் பட்டது . உடனே படித்துவிட்டேன் . இசை பற்றி எதுவும் தெரியாத எனக்கு அதில் பல புதிய செய்திகள் இருந்தன ?

 

1] கர்நாடக இசை என்பது என்ன ?

2] ஹிந்துஸ்தானி இசை என்பது என்ன ?

3] தமிழில் பாடினாலே அது தமிழிசையாகிவிடுமா ?

4] இசைக்குள் மதம் ,சாதி புகுத்தப்பட்டதா ? கர்நாடக  இசை ஒரு சாதிக்கு சொந்தமானதா ?

5] கர்நாடகா இசைக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் வேறுபாடு என்ன ?

6] ஆப்பிரஹாம் பண்டிதர் யார் ?அவர் தமிழ்இசைக்கு பங்களித்தது என்ன?

7]கருணாமிருத சாகரம் எனும் நூலின் சாரம் எது ? சங்கீத ரத்தினாகரம் நூல் என்ன சொல்கிறது ?

8] சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் சொன்னதென்ன ?

9] இசை மும்மூர்த்திகள் என சொல்லப்படுபவர்கள் யார் ? யார் ? அதில் இருவித பட்டியல் வந்தது எப்படி ?

10] மெய்யான தமிழிசை என்பது யாது ?

 

இப்படி எழும் பல கேள்விகளுக்கு சுருக்கமான பதில்களோடு  களப்பிரன் எழுதிய “ இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் “ எனும் நூல் வாசித்து விபரங்கள் அறிந்தேன் . நான் பாடல்களை ரசிப்பேன் .ஆயினும் இசையில் ஞானசூன்யம் . எனவே இந்நூலுக்கு விமர்சனம் எழுத என்னால் இயலாது .

 

வாசிப்பீர்!!

 

இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

ஆசிரியர் : களப்பிரன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு :044 24332924 /24330024 /8778073949

 

Email : bharathiputhkalayam@gmail.com , www.thamizhbooks.com

 

பக்கங்கள் : 48 , விலை :ரூ.50/

 

 

சுபொஅ.

13/4/2022.

 

 



0 comments :

Post a Comment