சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 5

Posted by அகத்தீ Labels:





சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [5 ]

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுதாம்

சு.பொ.அகத்தியலிங்கம்.


“ சொர்க்கத்தில் /சைத்தான் அலைந்து திரிவதைக் கண்டு / கட வுள் கேட்டார் : / ‘ இங்கு ஏன் வந் தாய் ?/ உன் வேலை கீழே தானே ? ’ /அதற்கு சைத்தான் சொன்னது : /‘இங்கே ஒளிந்து கொள்வதற்காகவே / வந்தேன் ஆண்டவரே , / கீழே நடப் பவற்றைப் கண்டு /திகைத்துப் போ னேன். / எனக்கு /எந்த வேலையையும் /மனிதன் /விட்டுவைக்கவில்லை . /என் கலை எல்லாவற்றையும் /அவன் கற்றுத் தேர்ந்துவிட்டான்..

”காஷ்மீரியக் கவிஞன் நூர்முகமது ரோஷன் எழுதிய அனுபவ வரிகள் இவை .வாழ்க்கைதரும் அனுபவமே தனி . திரைத்துறையில் கண்ணதாசன் எழுதிய தத்துவப் பாடல்களும் சோகப்பாடல்களும் இன்றைக்கும் மனதை துயரம் அறுக்கும்போது ஒத்தடம் கொடுப்பவை . “ போனால் போகட்டும் போடா” , “ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” போன்ற பாடல்களை முணுமுணுக் காத உதடுகள் மிகமிக சொற்பம்

.ஒரு முறை ‘’மெட்டுக்குப் பாட் டெழுத மாட்டாராமே பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்... உண் மையா?’’ என்ற கேள்விக்கு எம் . எஸ். விஸ்வநாதன் ஒரு பேட்டியில் சொன் னார் , “உண்மைதான். தன்னோட பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டுப் போடணும்கிறதை ஒரு வைராக்கிய மாகவே வெச்சிருந்தார் பட்டுக் கோட்டையார். ‘பாசவலை’னு (1956) ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சிக்குரிய பாடலை முதலில் கண் ணதாசன் எழுதினார். தயாரிப்பாளர், இயக்குநரை அந்தப் பாட்டு வரிகள் அவ்வளவா ஈர்க்கலை. அப்புறம் கவிஞர் மருதகாசிகிட்ட எழுதச் சொன்னோம். அதுவும் சிறப்பா அமையலை. அப்போ ஒரு நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனக்கு அறிமுகமானார். ‘சரி...’ எதுக்கும் இவரையும் எழுதச் சொல்லிப் பார்ப்போம்’னு அவர் கிட்டே சிச்சுவேஷனைச் சொல்லி எழுதச் சொன்னோம். எழுதிட்டு வந்து கொடுத்தார். பிரமாதமான வரி களா இருந்தன... ‘குட்டி ஆடு தப்பி வந்தால் / குள்ளநரிக்குச் சொந்தம் / குள்ளநரி மாட்டிக்கிட்டா / கொற வனுக்குச் சொந்தம்! / தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் / பட்டதெல்லாம் சொந்தம் ! / சட்டப்படி பார்க்கப் போனால் / எட்டடிதான் சொந்தம்’ -பாட்டு எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு ”இந்த எட்டடிக்கு மேல் வாழ்க் கையை யாரு பாடிட முடியும் என கவிஞர் வாலி தலையில் வைத்துக் கொண்டாடினார் .அடுத்தடுத்த வரிகள் கூட வாழ் வின் நிலையாமையை பாடும் .

பொது வாக கவிஞர்கள் வாழ்க்கை துயரத்தை பாடும்போது தன்னை மறந்து விடுவர் . நம்பிக்கை வறட்சி தலைதூக்கிவிடும் . கவிதையிலாவது அதனை கட்டுப்படுத்துவது கவிஞ ருக்கு சாத்தியமாகும் . திரைப்பட பாடலெனில் கதைச் சூழல் கதை மாந்தரின் மனோ நிலை இவற்றை எதிரொலிக்க வேண்டும் . இச்சூழ லில் கவிஞரின் வரம்பு குறுகிவிடும். ஆயினும் அந்தக் குறுகிய எல்லை யில் நிற்கும் போதும் சமூகப்பார்வை யோடு எப்படி பட்டுக்கோட்டை யால் பாட முடிந்தது என்பதுதான் ஒரு புதிர் . கவிஞரின் ஆற்றல் .சரி விஷயத்துக்கு வருவோம். வாழ்க்கை நிலையாமையை பாடும் சூழலிலும் “ கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் / குருவியின் சொந்தம் தீருமடா / ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் / அதோட சொந்தம் மாறு மடா ..” என்றார் .

முடிவாகப் பார்க் காமல் ஒன்றின் முடிவை இன்னொன் றின் தொடக்கமாக நம்பிக்கையோடு பார்க்க பட்டுக்கோட்டையாலன்றி வேறுயாரால் முடியும் . ஆம்! குருவி குஞ்சு பறக்க எத்தனித்தால் சாத்தியம்; ஆட்டுக்குட்டி தன் பாதையை தேர்வது சாத்தியம் என்றார் . ஒரு பிடி வாய்க்கரிசியிலே வாழ்க்கை முடிந்து போகும் “ செத்த பின்னே அத்தனைக்கும் சொந்தக்கா ரர் யாரு” எனக் கேள்வி எழுப்பி மரணம் நிச்சயம் அதற்கு முன் வம்பு ஏன் பாசாங்கு ஏன் ஆட்டம் ஏன் என நுட்பமாய் கேட்டு மனம் திருந்தச் சொன்னவர் பட்டுக்கோட்டை எனில் மிகை அல்ல .பதிபக்தி (1958 ) பாடலில் வேறொரு விதமாக ஆட்டோடு நம் வாழ்வை இணைப்பார் .

“ இரை போடும் மனிதருக்கே / இரையாகும் வெள்ளாடே / இதுதான் உலகம் வீண் / அனுதாபம் கொண்டு நீ / ஒரு நாளும் நம்பிவிடாதே ! / டேயண்ணா ..டேயண்ணா .. டேயண்ணா .. ட்ரியோ ..டேயண்ணா ..” என எச்சரித்தார் .ஆனால் இந்த உலகம் எப்படிப் பட்டது தெரியுமா ? “ முறையோடு உழைத்துண்ண / முடியாத சோம் பேறி / நரிபோல் திரிவார் புவிமேலே –நல்ல / வழியோடு போகின்ற / வாய் பேசா உயிர்களை / வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே ..” இந்த சோம்பேறிகள் பிறரை ஏய்த்து வாழ்பவர்கள். திருந்த மாட்டார்கள்; போதனைகளை காதில் கேட்டு ரசிப்பாங்க அத்தோடு விட்டுரு வாங்க என சொன்னவன் பட்டுக் கோட்டை.அதனாலே என்ன ? இந்த குணம் தனிமனிதரோடு போகுமா ? போகா தென்பது பட்டுக்கோட்டை வாதம் . “ பாடுபட்டுக் காத்த நாடு கெட்டுப் போகுது / கேடுகெட்ட கும்பலாலே – இந்த / கேடுகெட்ட கும்பலாலே” (விக்கிரமாதித்தன் – 1962) எனச் சரியாக அடையாளம் காட்டினான் . எதனால் இந்த நிலைமை? அதையும் சரியாக அடையாளம் காட்டினான். “ சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது / மூடர்களின் தலையிலே – பெரும் .. சூடுபட்ட / வேடிக்கையான பல வித்தைகள் கண்டு பயந்து / வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே “அதென்ன சூடுபட்ட மடமை ? பட்டுக்கோட்டையின் கற்பனைக் கும் ஆழ்ந்த கூர்மையான பார்வைக் கும் இவ்வரி சான்று . “ சூடு.என்பது வெளியே உள்ளவர்களால் போடு வதுதானே !” என்பார் பா .வீரமணி .

ஆம் சுரண்டல் சமூக அமைப்பு போட்ட சூடு அது . அங்கு மடமை முட்டையிட்டு குஞ்சு பொரித்து பல்கிப் பெருகி பெருகி சவாலா கிவிடுகிறது . அதனாலே “ வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு / வாழ இடமிருக்கு மண் மேலே – இன்னும் / வாழ இடமிருக்கு மண் மேலே.”என அவர் சுட்டிய சமூக யதார்த் தம் இன்றும் தொடர்கதையாய் உள்ளதே ! என் செய்ய ?

“ தோள் கனக்குது சுமை கனக்குது
தொல்லை வழிப்பயணம் ! – இது
தொல்லை வழிப்பயணம்!
நாள் கனக்குது நடை கனக்குது
நைந்த வழிப்பயணம் – இது
நைந்த வழிப்பயணம் ” என்பார் கவிஞர் தமிழ் ஒளி .இந்த நைந்த வாழ்வைக் கண்டு வாடியவர் . திரைப்படப் பாடல்க ளூடே பாடியவர் . சாடியவர் . . மீள வழி தேடியவர் பட்டுக்கோட்டை . தொடர்ந்து பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 2 ஜூன் 2014

0 comments :

Post a Comment