ஓர் அனுபவம்
– ஓர் வாசிப்பு …..
முதலில் அனுபவம்
…
தமிழ்நாட்டைச்
சார்ந்த ஓய்வு பெற்ற ஓர் போக்குவரத்துத் தொழிலாளியோடு ஒரு நாள் பெங்களூரில் நடை பயிற்சி
போய்க் கொண்டிருந்தேன் . வழியில் அம்பேத்கர் படம் தாங்கிய ஒரு அறிவிப்புப் பலகையைப்
பார்த்ததும் , “ என்ன சாதிச்சிட்டதுக்காக இப்ப
தெருவெல்லாம் நட்டு வைச்சிருக்காங்க …” என ஆரம்பித்து வசை பாடினார் . எனக்கு கொஞ்சம்
அதிர்ச்சியாக இருந்தது . நான் கொடுத்த விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கத் தயார் இல்லை
. ஆதிக்க சாதி மனோநிலையில் அவர் உறைந்து போயிருந்தார் .
அடுத்து வாசிப்பு
….
“ எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் ஓர் தமிழாசிரியர்.”
ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை . அழகிய பெரியவன் எழுதிய கதை . அண்மையில் வாசித்தேன்
. வகுப்பில் அம்பேத்கர் பாடத்தையே வாசிக்க விரும்பாமல் தட்டிக் கழித்த ஒரு தமிழாசிரியர்
கதை அது . ஆனால் மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறுகிறார் . தெளிவு பெறுகிறார்
.
“ அம்பேத்கருடைய
பாடத்தை நான் இப்ப நடத்தப் போறேன்! இந்தப் புத்தகத்தை எனக்குப் படிக்கக் கொடுத்தவன்
என்னுடைய நண்பன் சிவராஜ் . ஒரு முறை இதே மாதிரி வகுப்பறையில எனக்குப் பிறந்த நாள் கொண்டாடிய
போது காட்டுப் பழங்களைக் கொடுத்தான் …. பதிலுக்கு நான் அவனுக்கு என்ன கொடுத்தேன்னு
நினைவில்ல ! இன்னும் கொஞ்ச தூரம்தான் நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டோம் ! இன்னும் கொஞ்ச
தூரம் நகர்ந்து நகர்ந்து போவோம்! ஒண்ணாவே போவோம் ! இன்னும் கொஞ்ச தூரம்தான்.”
இக்கதை நாட்டு
நடப்பை நமக்குச் சொல்லித் தந்துவிட்டது . ஆம் ‘அ’ கூட அறியாமல் இன்னும் வெறுப்புப்
பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போரிடம் அம்பேத்கரைக் கொண்டு சேர்ப்போம் .
16 சிறுகதைகள்
. அனைத்தும் தலித் சிறுகதைகள் . புதியவர்கள் எழுதிய 8 கதைகள் . அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள்
எழுதிய எட்டு கதைகள் . புதுசோ பழசோ வலிகள்தான் இக்கதைகளில் நிரம்பி வழிகிறது. தலித்
வாழ்க்கை அதுதானே . வாசிக்க வேண்டிய நூல் .
இன்று ஏப்ரல்
14 அம்பேத்கர் பிறந்த நாள் .
நவீன தலித்
சிறுகதைகள் , தொகுப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com ,பக்கங்கள் :176 , விலை
: ரூ.180 /
சுபொஅ.
14 /06
/26 .
.jpg)

0 comments :
Post a Comment