சும்மா இரு

Posted by அகத்தீ Labels:

 



சும்மா இரு ! கொஞ்சநாட்கள்

வாயையும் கையையும்

பொத்திக்கொண்டு

மூளை கட்டளையிடுகிறது

அடுத்த நொடியே மீறுகிறது

 

நீ பேசி எழுதி

என்ன ஆகப் போகிறது ?

அதுவும் சரிதான்

சும்மா இருந்தால்

சரியாய் போய்விடுமா

 

உன் முணுமுணுப்பு

உனக்கேகூட கேட்காமல் இருக்கலாம்

எல்லா முணுமுணுப்புகளும்

நிச்சயம் பேரிரைச்சல் ஆகும்

நிறுத்தாதே தொடரு !

 

சுபொஅ.

01/10/25.


0 comments :

Post a Comment