கேள்வி நியாயந்தான் கத்தி

Posted by அகத்தீ Labels:

 

எதிர்காலம் கொஞ்சம்

இருட்டாகத்தான் தெரிகிறது

 

அறிவியலின் பாய்ச்சல் வேகம்

பிரமிக்க வைக்கிறது

 

அப்புறம் ஏன்

எதிர்கால பயம் ?

 

கேள்வி நியாயந்தான்

கத்தி

யார் கையில் இருக்கிறது

எதற்குப் பயன்படுகிறது

என்பதுதானே கேள்வி

 

லாபவெறி போதையில்

தலைதெறிக்க ஓடும்

சுரண்டும் வர்க்கம்

மனிதனை

மறந்து போகுமோ ?

 

உற்பத்தி செய்ய

மனிதனுக்கு மாற்றாய்

AI செயற்கை நுண்ணறிவு

சரிதான் ! சரிதான் !

இனி நுகர்வோராகவும்

AI போதுமோ !

 

வாங்கும் கரங்கள் இல்லாமல்

எதனை யாரிடம் விற்பீர்கள் ?

 

உலகமே சுடுகாடாயின்

நீங்கள் மட்டுமா

பிழைத்துக் கிடப்பீர்கள் !

 

லாபவெறி போதை

உச்சத்தில் கொண்டோரே

சொல்லுங்கள் !

 

மதமும் சாதியும் இனமும்

மனிதத்தைக் கூறுபோடும்

ஒரு போதும் வாழவிடாது !

 

மார்க்சியம் தழைக்காமல்

எதிர்காலம் இல்லை

மனித குலத்துக்கு!

 

சுபொஅ.

21/10/25.

 

0 comments :

Post a Comment