சும்மா இரு
! கொஞ்சநாட்கள்
வாயையும்
கையையும்
பொத்திக்கொண்டு
மூளை கட்டளையிடுகிறது
அடுத்த நொடியே
மீறுகிறது
நீ பேசி எழுதி
என்ன ஆகப்
போகிறது ?
அதுவும் சரிதான்
சும்மா இருந்தால்
சரியாய் போய்விடுமா
உன் முணுமுணுப்பு
உனக்கேகூட
கேட்காமல் இருக்கலாம்
எல்லா முணுமுணுப்புகளும்
நிச்சயம்
பேரிரைச்சல் ஆகும்
நிறுத்தாதே
தொடரு !
சுபொஅ.
01/10/25.