சும்மா இரு

Posted by அகத்தீ Labels:

 



சும்மா இரு ! கொஞ்சநாட்கள்

வாயையும் கையையும்

பொத்திக்கொண்டு

மூளை கட்டளையிடுகிறது

அடுத்த நொடியே மீறுகிறது

 

நீ பேசி எழுதி

என்ன ஆகப் போகிறது ?

அதுவும் சரிதான்

சும்மா இருந்தால்

சரியாய் போய்விடுமா

 

உன் முணுமுணுப்பு

உனக்கேகூட கேட்காமல் இருக்கலாம்

எல்லா முணுமுணுப்புகளும்

நிச்சயம் பேரிரைச்சல் ஆகும்

நிறுத்தாதே தொடரு !

 

சுபொஅ.

01/10/25.


சாகசக்காரன்…

Posted by அகத்தீ Labels:

 


சாகசக்காரன்…

 

முதுமையிலும்

நானொரு ‘சாகசக்காரன்’

நம்பவில்லையா ?

உடைக்கப்பட்ட பூசனிக்காயும்

குங்குமமும் பொரியுமாய்

சிதறிக்கிடக்கும்

தெருக்களின் வழியே

ஒரு மணி நேரமாய்

வழுக்கி விழாமல்

ஆயுத பூஜை நாளில்

நடை பயிற்சி சென்று வந்த

நான் ‘சாகசக்காரன்’தானே !

 

சுபொஅ.

02/10/25.