தாடி மீசை

Posted by அகத்தீ Labels:

 



தாடிக்கும் எனக்கும்

என்னதான் பிணக்கு ?

 

மீசை அரும்பிய வயதிலேயே

தாடியின் மீது காதலும் அரும்பியது !

 

வாலிப வயதில் தாடி ஆசையில்

ஆட்டுத்தாடி [ ஃபிரெஞ்ச் தாடி ]யோடு அலைந்தேன்.

 

நூல் வாசிக்க வாசிக்க  தாடிக்காரர்கள்

மீது காதல் பொங்கியது

 

பெரியார் ,தாகூர் , மார்க்ஸ் இப்படி

தாடிகள் மிகவும் ஈர்த்தன.

 

எவ்வளவு உரம் போட்டும் எனக்கு

தாடி முளைக்கவே மறுக்குது

 

வாலிபத்தில் கருந்தாடியும் இல்லை

வயோதிகத்தில் வெண் தாடியும் இல்லை.

 

ஆசையில் பாதி  பெரிய

வெண் மீசையில் நிறைவேறியதோ !

 

நிறைவேறா தாடிக்காதலை

கவிதையிலாவது சொல்லிவைப்போம் !

சுபொஅ.

18/10/24.


0 comments :

Post a Comment