அம்மியும் ஆட்டுக்கல்லும் உலக்கையும்

Posted by அகத்தீ Labels:

 

அம்மியும் ஆட்டுக்கல்லும் உலக்கையும்

அருங்காட்சியக் பொருள்களாகிவிட்டன

வருத்தமில்லை எம்பெண்களின் முதுகெலும்பை

உடைத்துக் கொண்டிருந்ததல்லவா ?

 

உள்கிராமத்திலும் நைட்டியின் சுதந்திரத்தை

எம் பெண்கள் அனுபவிப்பது சாதாரணமானதா ?

உடைக்கட்டுப்பாடு உடைகிறது என்பதால்

வருத்தம் இல்லை .மகிழ்ச்சிதான் .

 

ஆணாதிக்கமும் பண்பாட்டு போலிஸுகளும்

பல்லை நற்நறவென கடித்தாலும்

அவர் வீட்டுக்குள்ளும் மெல்லமெல்ல

மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன

 

ஆனால் என்ன ? மண்டைக்குள்ளே கூடுகட்டி வாழும்

ஆணாதிக்க புழுக்களும் சாதி மத விஷப்பூச்சிகளும்

மீண்டும் இருட்குகையை நோக்கி விரட்டுகின்றனவே !

பெண்களில் ஒருசாராரையும் இப்பெருநோய் தொற்றிவிட்டதே !

 

சுபொஅ.

4/7/2022.

 

 

0 comments :

Post a Comment